Thursday, May 03, 2007

இரவில் மூடப்படுகிறது கொழும்பு கட்டுநாயக்க வானூர்தி நிலையம்!

சிறிலங்கா கொழும்பு கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தினை இரவில் மூடும் முடிவை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.


வான்புலிகளின் தாக்குதலால் சிறிலங்காவுக்கான பல வானூர்தி சேவைகள் நிறுத்தப்பட்டு வரும் நிலையில் பகல் சேவைகளை மட்டும் வானூர்தி சேவை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கட்டுநாயக்க வானூர்தி நிலையமானது எதிர்வரும் 10 ஆம் நாள் நாள்முதல் இரவில் மூடப்படவுள்ளது.

வானூர்தி நிலையம் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4.30 மணிவரை முழுதாக மூடப்படும் என்று சிறிலங்கா வானூர்தி சேவைகள் பணிப்பாளர் பராக்கிரம திசநாயக்க தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

No comments: