Thursday, May 03, 2007

கன்னியாகுமரி மீனவர் பிரச்சினை- தமிழக டிஜிபியின் அறிக்கை மர்ம நாவலைப் போல் உள்ளது: மருத்துவர் இராமதாஸ்.

கன்னியாகுமரி மீனவர் பிரச்சினையில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி தமிழக டிஜிபி(காவல்துறை தலைவர்) கூறியிருப்பது மர்ம நாவலைப் போல் உள்ளது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் சாடியுள்ளார்.


திண்டிவனத்தில் இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர் மாநாட்டில் மருத்துவர் இராமதாஸ் கூறியதாவது:

தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள் பிடித்து வைத்திருப்பதாகவும், மீனவர்கள் சிலரை அவர்கள் தான் சுட்டு கொன்றார்கள் என்றும் தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிபி கூறியது மர்ம நாவல் போல் உள்ளது. அவர் கூறியது நம்பும்படியாக இல்லை. அதற்கு காரணம் எனக்கு தெரியும் ஆனால் சொல்லக்கூடாது என்றார் அவர்.
நன்றி>புதினம்.

No comments: