Saturday, May 12, 2007

தமிழக மீனவர்களின் ஊடுருவலானது புலிகளின் தாக்குதலுக்கு உதவி செய்கிறது: சிறிலங்கா குற்றச்சாட்டு!

சிறிலங்கா கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் ஊடுருவுவதானது எமது இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உதவியாக இருக்கிறது என்று சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.


தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை சுட்டுக்கொல்வதாக இந்திய நாடாளுமன்றத்தில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.எகே.அந்தோணி கடந்த புதன்கிழமை பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதனை மறுத்து இன்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இரு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை சுட்டுக் கொல்வதற்கு துல்லியமான எதுவித சாட்சியமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறிலங்கா கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அதிகமாக ஊடுருவுவதானது எமது இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியாக இருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி>புதினம்.

No comments: