Friday, September 22, 2006

ஹக்கீமுக்கான அதிரடிப்படை பாதுகாப்பு விலக்கம்.

சர்வதேச விசாரணை எதிரொலி:
அம்பாறை முஸ்லிம்கள் படுகொலை தொடர்பான சர்வதேச அளவிலான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு அளிக்கப்பட்ட அதிரடிப்படை பாதுகாப்பை சிறிலங்கா அரசாங்கம் விலக்கிக் கொண்டுள்ளது.
ஹக்கீம் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த 6 அதிரடிப்படையினரை கொண்ட குழு விலக்கும் உத்தரவை சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ நேற்று வியாழக்கிழமை பிறப்பித்தார்.
இன்று முதல் ஹக்கீமுக்கான பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படுகிறது.
அம்பாறை படுகொலை தொடர்பில் சர்வதேச அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தி வந்த ஹக்கீம் இது தொடர்பில் மகிந்த ராஜபக்சவுக்கும் நேற்று கடிதம் அனுப்பியிருந்தார். மகிந்தவுக்கு கடிதம் அனுப்பிய பின்னரே பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் சிறிலங்கா அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவினர் தொடர்ந்து ஹக்கீமின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி>புதினம்.

No comments: