Wednesday, September 13, 2006

ஒஸ்லோ பேச்சுக்கு சிறீலங்கா அரசு இணக்கம் தெரிவிப்பு.

ஒஸ்லோப் பேச்சுக்கு சிறீலங்கா அரசு இணக்கம் தெரிவிப்பது உண்மை என சிறீலங்காவின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் பாலித்த கோகன்ன தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போது விடுதலைப் புலிகள் பேச்சுக்கு வருவார்கள் என்றால் நாங்களும் வருவதற்கு தயார் எனத் கோகன்ன தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் நாட்டில் உள்ள பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டும் என்ற உண்மையான நோக்கோடு வருவார்கள் எனவும் பேச்சுக்கான சூழலைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் ஆயுத பலத்தையும் ஆள் பலத்தையும் அதிகரிக்க மாட்டார்கள் என நம்புவதாகவும் கோகன்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளதாக அரசாங்க சமாதான செயலகம் தெரிவித்துள்ளது.

எனினும் தமிழீழ விடுதலைப்புலகள் வன்முறைகளையும் தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும் என சமாதான செயலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை நடைபெறும் திகதி மற்றும் இடம் என்பன தொடர்பாக அரசாங்கம் நோர்வே அனுசரணையாளர் இடையில் கருத்து பரிமாற்றங்கள் மூலம் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சமாதான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஒஸ்லோ நகரில் நடைபெற உள்ளதாகவும் அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என நோர்வே தரப்பினர் தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்க சமாதான செயலகம் இந்த அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.

இதேவேளை நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் தயார் என நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது பொதுமக்களை பிழையான வழியில் இட்டு செல்ல வழிவகுக்கும் என பாதுகாப்பு தொடர்பான பேச்சாளர் கேலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தேசிய பாதுகாப்பு மையம் அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளது.
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என்ற விடயம் தொடர்பாகவோ அல்லது ஒக்டோபர் முதல் வாரத்தில் பேச்சுக்கள் ஒஸ்லோவில் நடைபெறும் என்பது தொடர்பாகவோ அரசாங்கம் நோர்வே ஏற்பாட்டாளர் தரப்புடன் கலந்தாலோசனை எதனையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் கேலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
சொல்ஹெய்ம் தமது அறிவித்தலின் போது வடக்குகிழக்கு இணைப்பை பற்றி கருத்துரைத்துள்ளார்.
1987 ஆம் ஆண்டு: இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் படி தங்காலிமாக இணைக்கப்பட்ட வடக்குகிழக்கு மாகாணம் தொடர்பில் தற்சமயம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பபட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் ஏற்பாட்டாளர் தலையிடுவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என்றும் கேலிய ரம்புக்வெல இவ்வாறு முரண்பட்ட கருத்தினைத் தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
நன்றி>பதிவு.

No comments: