Wednesday, September 20, 2006

மேலும் மூன்று முஸ்லீம்கள் ராணுவத்தால் சுட்டுக்கொலை.


இரண்டாவது இணைப்பு

அம்பாறை உல்லைப் பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் 14 பேர் காயம்.
அம்பாறை உல்லை பகுதியில் இன்று காலை முஸ்லிம் மக்கள் மீது விசேட அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் 14 முஸ்லிம்கள் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமான முறையில் இருப்பதாகவும், அவர்கள் தீவிர சிகிற்சைக்காக அஸ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையின் தீவிர சிகிற்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஏனையவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதேநேரம் இந்தச்சம்பவத்தில் முன்னர் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் அதில் எந்தவித உண்மையும் இல்லை. அப்பகுதியில் தற்போது பொலிஸ் ஊரடங்கு சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அப்பகுதிகளை அண்டிய உல்லை, பெரிய உல்லை பிரதேச சிங்கள, தமிழ் மக்கள் அச்சம் காரணமாக இடம்பெயர்ந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி>பதிவு

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியில் தொடர்ந்தும் விசேட அதிரடிப்படையினருக்கும், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் தொடர்ந்தும் பதட்ட நிலைமை காணப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று காலை உல்லைப்பகுதியில், முஸ்லிம் இளைஞர்கள் அதிரடிப்படையினர் படுகொலைசெய்தமையினை கண்டித்து ஹர்தால் அனுசரித்துக்கொண்டிருந்தபோது, அங்கு குவிந்த விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்த முஸ்லிம் இளைஞர்களை கடுமையாக தாக்கியதாகவும், தொடர்ந்து தர்க்கம் ஏற்படவே துப்பாக்கிப்பிரயோகத்தை அவர்கள் மேற்கொண்டனர் என்றும் இதன் காரணமாக மூன்று அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலியாகியுள்ளதாகவும், அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி>பதிவு.

No comments: