Monday, September 18, 2006

ஐ.நா. ஆணையத்திலிருந்து சிறிலங்கா வெளியேற்றம்?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் வெளியேற்றப்படக் கூடும் என்று தெரிகிறது.
ஆசிய மனித உரிமைகள் ஆணையம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டுத் தீர்மானங்களில் சிறிலங்கா கைச்சாத்திடவில்லை என்றும் அந்த அமைப்புக்களால் சிறிலங்காவை கட்டுப்படுத்த முடியாது என்றும் கடந்த வாரம் சிறிலங்கா தலைமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆகையால் சர்வதேச மனித உரிமைகள் சமூகத்திலிருந்து சிறிலங்காவை வெளியேற்ற வேண்டும்.
சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற வழக்கு ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத் தீர்மானங்கள் சிறிலங்கா அரசாங்கத்தை கட்டுப்படுத்தாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி சரத் என்.சில்வா, நீதிபதிகள் நிஹால் ஜயசிங்க, என்.கே. உதலகம, நிமல் திசநாயக்க மற்றும் நிமல் காமினி அமரதுங்க ஆகியோர் அடங்கிய குழுவினர் இத்தீர்ப்பை அளித்தனர்.
நன்றி>புதினம்.

1 comment:

Jay said...

திருந்தாத ஜென்மங்கள்.. எ

என்று திருந்தும் இந்த சிங்கள தேசம்...