Monday, September 11, 2006

சிறீலங்காவிற்கு இணைத்தலைமை நாடுகளின் அச்சுறுத்தல்.

மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசுப் படைகளைக் குற்றம் சுமத்தும் பிரேரணை ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் முஸ்தீபு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
எதிர்வரும் 18ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸி லின் கூட்டத்தொடரில் அந்தப் பிரேரணை முன்வைக்கப்படவிருக்கிறது.
கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அதன் லண்டன் செய்தி யாளர் அனுப்பிய செய்தியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கொழும் புக்கான தூதர்கள் ஒன்று கூடிப் பேசிக் கொண்டதன் விளைவாக இந்த நகர்வு முன் னெடுக்கபடுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.
இலங்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான இந்த முயற்சியின் ஆரம்பக் கட்டக் கலந்தாலோசனை கடந்த புதனன்று பிர ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகத்தில் "ஆசியாவுக்கான கமிட்டி'யின்
அதிகாரிகள் சந்திப்பின்போது இடம் பெற்றதாக பிரஸல்ஸில் இலங்கை விவகாரத் து டன் தொடர்புபட்ட இராஜதந்திர வட்டாரங் கள் தெரிவித்தன.
இலங்கையைக் கடுமையாக விமர்சிக்கும் பிரேரணை ஒன்றை முன்வைக்க அக்கமிட்டி ஏகமனதாகத் தீர்மானித்தது.
இலங்கைப் பிணக்குக்கு அடிப்படையான சிக்கல்களைத் தீர்த்துவைப்பதற்குத் தேவை யான போதுமான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை தவறிவிட்டது என்ற தீவிர மான கருத்து நிலைப்பாடு அந்த அதிகாரி கள் மட்டத்தில் நிலவுவதால் சாட்டையடி கொடுப்பதற்கான நேரம் இது என அவர்கள் கருதுகின்றனர் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கையின் பிந்திய போர்க்கால நிலைமை குறித்து ஆராய்வதற்காக இலங் கைக்கு உதவும் நாடுகளின் இணைத்தலை மைகள் இவ்வாரம் பிரஸல்ஸில் கூடும்போது, மேற்படி பிரேரணையின் நகல் வடிவம் குறித்து அந்த இணைத் தலைமைகளோடும் விரிவாக ஆராயப்படக் கூடும்.
இனப்பிரச்சினைக்கான அனுசரணைத் தரப்பான நோர்வேயும், ஐரோப்பிய ஒன்றி யமும் அந்த இணைத் தலைமைகளில் இடம் பெற்றுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் நோர்வே இடம்பெறாவிட்டாலும் மனித உரிமை மீறல்களுக்காக இலங்கை அரசுப் படைகளை யும், அரசையும் விமர்சிக்கும் பிரேரணை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் மூலம் ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸில் முன் வைக்கச் செய்வதில் நோர்வே முழு முனைப்புடன் செயற்படுகின்றது.
அதேசமயம், விடுதலைப் புலிகளை அண்மையில் தடை செய்த ஐரோப்பிய ஒன் றியத்தை விரைவில் அத்தடையை நீக்கும் என்ற முக்கிய நிலைப்பாட்டை எடுக்கவைக் கச் செய்வதிலும் நோர்வே முனைப்பாக உள்ளது.
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து அண்மையில் விலகிச் சென்ற உல்ப் ஹென்றிக்ஸனின் அறிக்கையின் அடிப்படையிலேயே இலங்கை அரசுக்கு எதிரான கடும் நிலைப்பாட்டை கொழும்பை மையமாகக் கொண்ட ஐரோப் பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் எடுத்திருக்கிறார்கள்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்பாக மேற்படி இலங்கை அரசுக்கு எதி ரான பிரேரணை கொண்டுவரப்படும் போது, அதற்கு ஆதரவாக இணைத் தலைமைகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்கக்கூடிய ஐக் கிய நிலைப்பாட்டை எடுக்கச் செய்யும் முயற்சியில் ஒஸ்லோ ஈடுபட்டுள்ளது. மற் றைய இரு இணைத்தலைமை நாடுகளான அமெரிக்காவையும், ஜப்பானையும் இம்முயற்சிக்கு இணங்க வைப்பதற்கும் நோர்வே முழுப் பிரயத்தனம் எடுத்து வருகின்றது. இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டாமல் இராணுவ நடவடிக்கைப்போக்கில் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டம் கொண்டுள் ளார் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கொழும்புத் தூதுவர்கள் பொதுவாகக் கருது கிறார்கள்.
எனவே, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இரண்டு வித அழுத்த வழிமுறைகளை ஐரோப்பிய ஒன்றியம் கையாள முனைகிறது.
அதில் ஒன்றே ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன் இலங்கை அரசைக் கண் டிக்கும் பிரேணையை நிறைவேற்றுவது.
மற்றது ஐரோப்பிய ஒன்றியத்தின் அங் கத்துவ நாடுகளினால் இலங்கைக்கு வழங் கப்படும் உதவிகள் வெட்டப்படும் என அச்சு றுத்துவது.
இவ்வாறு அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இணைப்பு : newstamilnet.com
Monday, 11 Sep 2006 USA

No comments: