Monday, September 18, 2006

அதிரடிப்படை முகாம் அருகே 11 முஸ்லிம்கள் படுகொலை.

அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாம் அருகே 11 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படுகொலைச் சம்பவத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்துள்ள அறிக்கை:
அம்பாறை யால தேசிய பூங்கா அருகே 11 முஸ்லிம்கள் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
இப்படுகொலைச் சம்பவம் நடந்த இடம் அருகே சிறிலங்கா இராணுவம் முகாம் அமைந்துள்ளது. இந்த இடம் சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இத்தகைய படுகொலைகளை நிகழ்த்தும் போது தமிழீழ விடுதலைப் புலிகளைக் குற்றம் சாட்டுவதை நீண்டகாலமாக சிறிலங்கா இராணுவம் செய்து வருகிறது. இதற்கு நல்ல உதாரணமாக மூதூரில் 17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட் சம்பவத்தை சுட்டிக்காட்டலாம்.
தமிழீழ விடுதலைப் புலிகளை குற்றம்சாட்டி சிறிலங்கா இராணுவம் வெளியிடும் செய்திகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 நிவாரணப் பணியாளர்களின் குடும்பங்களை சர்வதேச ஊடகங்கள் சந்தித்தமையால் அது வெளிச்சத்துக்கு வந்த்து. அத்தகைய ஒரு நடைமுறையை ஊடகங்கள் இலங்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை பனாமா நகருக்கு அருகே இக்கொலைச் சம்பவம் நடந்ததாகவும் அவர்கள் அனைவரும் காணாமல் போனவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இக்கொலைச் சம்பவம் நேற்று நடந்திருக்கக்கூடும் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
ஆனால் சிறிலங்கா இராணுவ இணையத்தளத்தில் சாஸ்திரவெளி சிறிலங்கா அதிரடிப்படை முகாம் அருகே உள்ள றொட்வெல, பொத்துவில் பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டோர் பணிபுரிந்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

இது வேண்டுமென்றே தமிழ், முஸ்லீங்கள் இடையே மோதலை உருவாக சிங்களம் செய்யும் வேலை.