Saturday, September 09, 2006

இந்தியா, சிறிலங்கா அரசியலில் தலையிடக்கூடாது: அனுரா

சிறிலங்கா அரசியலில் இந்திய தூதுவர் நிருபமா ராவ் தலையிடுவதை சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க விமர்சனம் செய்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகால சட்ட மசோதா மீதான விவாதத்தின் போது அனுரா பண்டாரநாயக்க பேசியதாவது:
இனப்பிரச்சனைக்கு அரசியல் வழித்தீர்வுதான் காணப்பட வேண்டும். இராணுவ நடவடிக்கை தேவையில்லை.
இப்போது புலியை காயப்படுத்திருயிருக்கிறீர்கள். புலியை காயப்படுத்தினால் அது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் அது திருப்பித் தாக்கும்.
7 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர் சரவதேச தலைவர்கள் பட்டியலில் 32 ஆம் இடத்திலிருந்து 63 ஆம் இடத்துக்கு ஜோர்ஜ் புஸ் தள்ளப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஆண்டு யூலை மாதத்தில் ரொனி பிளேயர் பொறுப்பிலிருந்து விலக உள்ளார்.
ஈராக் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் அவர்களது மதிப்பு குறைந்துவிட்டன.
இனப்பிரச்சனையைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களும் ஒரு முக்கியமான அங்கம். 1938 ஆம் ஆண்டே கூட்டரசு முறையை பண்டாரநாயக்க வலியுறுத்தினார். கூட்டரசு முறையை வலியுறுத்திய முதல் சிங்களர் அவர்.
சம்பூரை கைப்பற்றியிருக்கலாம். ஆனால் அதனை தக்கவைக்கும் திறமையோடு இருக்க வேண்டும்.
ஒரு நாட்டை பிடிப்பது எளிது. அதனைத் தக்கவைப்பது கடினம் என்பார் நெப்போலியன்.
பாகிஸ்தானிய முன்னாள் தூதுவர் பசீர் வாலி மொகமெட் தன் மீதான தாக்குதலுக்கு இந்திய றோவை குற்றம்சாட்டியுள்ளார். எதுவித ஆதாரமுமில்லாமல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் அரசியலில் இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் தேவையில்லாமல் தலையிடுகிறார். எமது நாட்டை நாம் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் உங்கள் தூதரகப் பணியை பார்க்கவும்.
இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் முன்னைய இந்தியத் தூதுவர் ஜே.என். டிக்சிட் நடவடிக்கையால் ராஜீவ் காந்தியை விலை கொடுக்க நேரிட்டது.
சிறிலங்கா அரசாங்கம் யாருடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை இந்தியத் தூதுவர் கூறக்கூடாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட மகிந்த ராஜபக்ச ஏற்கனவே முடிவு செய்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவும் புத்திசாலித்தனமாக இந்த நட்புறவை அங்கீகரிப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார் அனுரா பண்டாரநாயக்க.
நன்றி>புதினம்.

No comments: