Tuesday, September 05, 2006

இணைத்தலைமை நாடுகள் சிறீலங்காவை எச்சரிக்குமா?

இலங்கை அரசை கடுந்தொனியில் எச்சரிக்க இணைத் தலைமை நாடுகள் ஆயத்தம்
இலங்கையில் மீண்டுமொரு போர் வெடிக்க வுள்ள சூழ்நிலையில் இலங்கைக்கு வழங் கப்படும் உதவிகள் தொடர்பில் கடும் நிபந் தனைகளை முன்வைத்து கடுந்தொனியில் எச்சரிப்பதற்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் உத்தேசித்திருக்கின்றன என்று நம்பகரமாக அறியமுடிகின்றது.
இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் கூட்டம் எதிர்வரும் பதினொராம் திகதி பிரஸல்ஸில் நடைபெற வுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது இலங்கை யின் தற்போதைய நிலைமை குறித்து விரி வாக ஆராயப்படவுள்ளது.
இலங்கையில் தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலைமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அரசும், புலிகளும் உடனடி நட வடிக்கைகளை எடுக்காத பட்சத்தில் இலங் கைக்கு தொடர்ந்து உதவிகளை வழங்குவது குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டி வரு மென்று இணைத்தலைமை நாடுகள் எச்ச ரிக்கை விடுக்கவுள்ளன என்று கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் கூறின.
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை தொடருமானால் உதவி வழங்கும் விவ காரத்தில் கடுமையான சில நிபந்தனைகளை முன்வைப்பதற்கும் இணைத்தலைமை நாடு கள் உத்தேசித்திருக்கின்றன எனவும் அந்த வட்டாரங்கள் கூறின.
இதேவேளை,
இணைத் தலைமை நாடுகளின் அழுத் தத்தைத் தவிர்க்கும் வகையில் சில இராஜ தந்திர நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
மூதூரில் சர்வதேச தொண்டு நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பிலும் இணைத்தலைமை நாடுகள் கடும் கண்டனத்தை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இணைப்பு : newstamilnet.com
Tuesday, 05 Sep 2006 USA

No comments: