Wednesday, September 06, 2006

மூதூர் படுகொலை: அக்சன் பார்ம் பணிகள் குறைப்பு.

சிறிலங்கா இராணுவத்தினரால் மூதூரில் தமது நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமையைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அக்சன் பார்ம் நிறுவனம் தனது பணிகளை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் எரிக் போர்ட் வெளியிட்ட அறிக்கை:
ஆழிப்பேரவை நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருந்த அமைப்பானது பணியாளர்களின் எண்ணிக்கையை 60 முதல் 70 விழுக்காடு குறைக்க முடிவு செய்துள்ளது.
நாங்கள் இலங்கையிலிருந்து வெளியேறவில்லை. ஆனால் எமது செயற்பாடுகளை குறைத்துள்ளோம். பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இலங்கைக்கு எமது அமைப்பினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அளவும் குறைக்கப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்கள் இயங்குவதற்கு ஏதுவான சூழ்நிலை இந்நாட்டில் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

2 comments:

Anonymous said...

மூதூர்ப் படுகொலை, பார்க்க:

vinnaanam.blogspot.com

Anonymous said...

see http://Veeraman.blogspot.com