Wednesday, September 06, 2006

இலங்கையில் மனித உரிமைகள் சீர்குலைந்துவிட்டது: ஐ.நா.

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையானது குறிப்பிடத்தகுந்தளவு சீர்குலைந்து போய்விட்டது என்று ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகள் தொடர்பிலான பிரிவின் தூதுவர் பிலிப் அல்ஸ்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சிறிலங்கா அரசாங்கத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் உத்திசார் இலக்காக பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இலங்கையில் மனித உரிமை முறைகேடுகளைத் தடுக்கவும் கண்காணிக்கவும் சர்வதேச அமைப்பு ஒன்று அவசியமானதும் அவசரமானதுமாக உள்ளது.
தங்களது நியாயப்பூர்வமான காரணங்களுக்கான ஆதரவை சர்வதேச சமூகத்திடம் எதிர்பார்க்கும் இருதரப்பினரும் மனித உரிமைகள் விடயத்தில் தங்களது நேர்மையான செயற்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: