Tuesday, September 26, 2006

விசாரணைகளில் ஈடுபாட்டுடன் அரசாங்கம் செயற்படவில்லை.

சிறிலங்கா அரசாங்கமானது படுகொலைகள் தொடர்பிலான விசாரணகைளில் முழுமையான ஈடுபட்டுடன் செயற்படவில்லை என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க் குற்றம்சாட்டியுள்ளார்.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:
இருதரப்பினராலும் மேற்கொள்ளப்படுகிற வன்முறையின் தன்மை அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. மிகவும் அதிருப்தியடைந்துள்ளோம். இந்த வன்முறையின் அளவு குறைவதாகத் தெரியவில்லை.
சிறிலங்கா அரசாங்கமானது படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகளில் முழு மனதுடன் செயற்படவில்லை. எமக்கு வருத்தமளிக்கிறது. இது புத்திசாலித்தனமானது அல்ல.
ஏனெனில் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பில் சர்வதேச சமூகத்தினது நம்பிக்கையும் பொறுமையும் இழந்து வருகிறது. மூதூர் படுகொலைகள் போன்றவை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமானது சர்வதேச சமூகத்தின் கடும் அதிருப்திக்கு முகம் கொடுக்க நேரிடும்.
சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டுக்கின்றனர். எந்தத் தரப்பும் வன்முறையை நிறுத்துவதாக தெரியவில்லை.
யாழ்ப்பாணத்தினது நிலைமை மிக மோசமாக உள்ளது என்றார் ஷோல்வ்பெர்க்.

நன்றி<புதினம்.

No comments: