
மூதூர் அக்சன் பாம் நிறுவன பணியாளர்கள் இருவரின் உடலங்கள் இன்று தோண்டியெடுக்கப் பட்டுள்ளன. மூதூர் மற்றும் திருகோணமலை மேலதிக நீதிவான் வசந்த தினசேனவின் முன்னிலையில் இந்த உடலங்கள் திருகோணமலை உப்புவெளி இந்து மயானத்தில் இருந்த தோண்டியெடுக்கப்பட்டன.
ரகசிய காவல்துறையினரின் கோரலின் பேரில் ரசாயன பகுப்பாய்வுக்காக இந்த உடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. தோண்டியெடுக்கப்பட்ட மாதவராஜா கேதீஸ்வரன்,முத்துலிங்கம் நர்மதன் ஆகியோரின் உடலங்கள் கொழம்புக்கு இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பப்படவுள்ளன.
இதேவேளை ஏனைய 15 பேரின் உடலங்கள் தொடர்பிலும் ரசாயன பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுவதற்கு மூதூர் மற்றும் திருகோணமலை மேலதிக நீதிவான் நேற்று நீதிவான் அனுமதி வழங்கினார்.
கடந்த மாதம் மூதூரில் ஏற்பட்ட மோதல்களின் போது இவர்கள் 17 பணியாளர்களும் கொலை செய்யப்பட்டனர். எனினும் இவர்களின் உடலங்கள் மூன்று நாட்களின் பின்னரே மீட்கப்பட்டன.
இந்தநிலையில் இவர்கள் கொலை சம்பவமானது சர்வதேச கவனத்திற்கு உட்பட்ட விடயமாக மாறியதை அடுத்து விசாரணைக்காக அவுஸ்திரேலிய நிபுணர்களின் உதவியும் பெறப்பட்டுள்ளது.
நன்றி>பதிவு.
No comments:
Post a Comment