Wednesday, September 13, 2006

நோர்வேயின் அனுசரணைக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவு.

இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான யுத்த நிறுத்தத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ளும் என்று தெரிவித்திருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை நெருக்கடிக்கு இறுதித் தீர்வு காண்பதற்கு போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பது முன்கூட்டியே தேவையெனவும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

நோர்வே அனுசரணையாளரின் சமாதான முயற்சியை ஏற்று இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் சமாதானப் பேச்சுகளை நடத்த வேண்டுமெனக் கூறிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை பிரச்சினையில் சுமுகத் தீர்வு ஏற்பட வேண்டுமென்பதையே இந்தியா விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ஜெர்மனியின் பிராஸ்க்பர்ட் நகரில் இருந்து பிரேசில் செல்லும் வழியில் விமானத்தில் பிரதமர் மன்மோகன்சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது;

இலங்கை பிரச்சினையில் சுமுகத் தீர்வு ஏற்பட வேண்டும். நோர்வே குழுவின் சமாதான முயற்சியை ஏற்று இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் சமரச பேச்சு நடத்த வேண்டும். இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது.
நன்றி>பதிவு.

No comments: