Saturday, June 02, 2007

இந்திய - இலங்கை கூட்டுக் கடற்ரோந்து உறுதி: மற்றொரு சந்திப்பில் இறுதி முடிவு!!!

பாக்குநீரிணையில் இந்தியக் கடற்படையினரும் சிறீலங்கா கடற்படையினரும் கூட்டுக் கடல்ரோந்து நடவடிக்கையை மேற்கொள்ள இந்தியா இந்தியா இணங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்தியா சென்ற சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் போகல்லாகம இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் அந்தோணியைச் சந்தித்தபோதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு ரோந்தை நடவடிக்கையை தொடர்பான இறுதி முடிவுகள் அடுத்துவரும் சந்திப்புக்களில் பேசி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு மாநாட்டிக்குச் சென்ற போகல்லாகம தமையிலான குழுவினரே இன்று புதுடெல்லி சென்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அந்தோணியைச் சந்தித்திருந்தனர் என்பது இங்கே சுட்டக்காட்டத்தக்கது.
நன்றி>பதிவு.

No comments: