Sunday, June 03, 2007

பிள்ளையான் அணியைச் சேர்ந்த 75 பேர் கருணா குழுவினரால் சிறைப்பிடிப்பு!

துணை ஆயுதக் குழுவான கருணா குழுவுக்கும் பிள்ளையான் குழுவுக்கும் இடையிலான முறுகல்நிலை மிக உச்சநிலையை அடைந்துள்ளது. இதன் ஒரு அங்கமாக பிள்ளையான் அணியினரைச் சேர்ந்த 75 பேரை கருணா குழுவினர் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அம்பாறை மற்றும் மட்டக்களப்பிலிருந்து திருமலைக்குச் செல்லும் வழியிலேயே இவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

கருணா அணியில் இருந்து பிள்ளையான் அணியுடன் இணைந்த உறுப்பினர்களின் மனைவிமார் அல்லது தாய்மார் என 30 க்கு மேற்பட்ட பெண்கள் சிறைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.

பிள்ளையானின் அணியில் உள்ள சீலன் என்பவரின் மனைவி, ஒரு வயதுக் குழந்தை மற்றும் மாமி ஆகியோரையும் பிடித்துச் சென்று சிறை வைத்துள்ளனர். சீலன் மட்டக்களப்புக்குச் சென்று கருணாவிடம் சரண் அடைந்தால் மட்டுமே அவரது குடும்பத்தினரை விடுவிக்க முடியும் எனவும் கருணா குழுவினர் அறிவித்துள்ளனர்.

இவ்வாறு சிறைப் பிடித்தவர்கள் கருணா குழுவினரின் மூன்று முகாங்களில் அடைந்து வைக்கப் பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அமைந்துள்ள முகாம், அக்கரைப்பற்று அமைந்துள்ள முகாம், மற்றும் வாகரையில் அமைந்துள்ள முகாமிலும் இவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். அதிகமான உறுப்பினர்கள் வாகரை முகாமிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி>பதிவு.

No comments: