Sunday, June 03, 2007

வவுனியாவில் ஆக்கிரமிப்பு படைகள் மீது அதிவிசேட பயிற்சி பெற்ற புலிகளின் கொமாண்டோ படைப்பிரிவு பாரிய தாக்குதல். ஆட்லறித்தளம் முற்றாக அழிப்பு!













(4 ஆம் இணைப்பு: மேலதிக படங்கள், படையினர் இழப்பு, போராளிகள் வீரச்சாவு, அழிக்கப்பட்ட, கைப்பற்றப்பட்ட ஆயுத விபரம்)

இத்தாக்குதலில் படையினரின் சடலங்கள், போர்க்கலங்கள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மன்னாரின் கிழக்கு எல்லைப் பகுதியில் இருந்து பாரிய படை நடவடிக்கைக்காக பரிசங்குளம், முள்ளிக்குளம், விளாத்திக்குளம் ஆகிய பகுதிகளுக்கு சிறிலங்காப் படையினர் நகர்ந்திருந்தனர்.

இந்நகர்வுப் படையினர் மீது நேற்று சனிக்கிழமை மாலை 7 மணிமுதல் விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் இன்று மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது.
விடுதலைப் புலிகளின் தாக்குதலையடுத்து பாரிய இழப்புக்கள் படையினருக்கு ஏற்பட்டன. பாரிய இழப்புக்களுடன் படையினர் பின்தளப்பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.
படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ள பகுதிகளில் விடுதலைப் புலிகள் தமது நிலைகளை பலப்படுத்தி வருகின்றனர்.

படையினர் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலில் பாரிய படை நடவடிக்கைக்காக வவுனியா பம்பைமடுவில் படையினர் வைத்திருந்த ஏழு ஆட்டிலெறிப் பீரங்கிகள் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. இதில் பெருமளவில் ஆட்டிலெறி எறிகணைகள், வெடிபொருட்கள் என்பனவும் குவிக்கப்பட்டிருந்தன.
படையினரின் இரண்டு ஆட்டிலெறிகள் முற்றாக சேதமாகியுள்ளதாக கொழும்பு சிங்கள இணைய ஊடகம் ஒன்று படைத்தரப்பு தகவலை ஆதாரமாக வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முள்ளிக்குளம், விளாத்திக்குளம் பகுதிகளில் படையினருக்கு அழிவுகள் ஏற்படுத்தப்பட்ட இத்தாக்குதலில் படையினருக்கு பெருமளவில் உயிரழிவுகள் ஏற்பட்டுள்ளன. முப்பதுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் பெரும் எண்ணிக்கையிலான படையினர் காயமடைந்தும் உள்ளனர்.

கொல்லப்பட்ட படையினரின் 15 சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இராணுவ கவச ஊர்தி - 01
ட்றக் ஊர்தி - 01
பிகே எல்எம்ஜிக்கள்
ஏகே எல்எம்ஜிக்கள்
ரி-56 ரக துப்பாக்கிகள்
40 மில்லி மீற்றர் குண்டு செலுத்தி
60 மில்லி மீற்றர் மோட்டார்கள
மற்றும் ஏராளமான வெடிபொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெற்றிகரமான இந்நடவடிக்கையில் தமது தரப்பில் 18 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

படங்கள்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி

வவுனியாவில் ஆக்கிரமிப்பு படைகள் மீது அதிவிசேட பயிற்சி பெற்ற புலிகளின் கொமாண்டோ படைப்பிரிவு பாரிய தாக்குதல். ஆட்லறித்தளம் முற்றாக அழிப்பு! டாங்கிகள், ஏவுகணைகள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன!!

நேற்றிரவு வவுனியா-மன்னார் எல்லைபுறத்திலுள்ள முள்ளிக்குளம், விளாத்திக்குளம் கிராமங்களை அண்மையில் கைப்பற்றிய சிறிலங்காப்படையினர், அங்கு பாரிய இராணுவ முகாங்களை அமைத்திருந்தனர். நேற்றிரவு ஏககாலத்தில் மம்பைமடுவிலுள்ள சிறிலங்காப்படையினரின் பாரிய ஆட்லறித்தளம் மீது தாக்குதலைத் தொடுத்த விடுதலைப் புலிகள் அதனை முற்றாக அழித்தெறிந்த சமயத்தில் விளாத்திக்குளம்-முள்ளீக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவமுகாங்கள் மீது கொமாண்டோ அணியினர் அதிரடித் தாக்குதலைத் தொடுத்தனர்.

தாக்குதல் தொடுக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே முகாங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த விடுதலைப்புலிகளின் கொமாண்டோ அணியினர், அங்கிருந்த டாங்கிகள், ஏவுகணைகள் உட்பட்ட அனைத்து ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றியதாக தெரிய வருகிறது, இவ்வெற்றிகரமான தாக்குதலை சர்வதேச ஊடகங்களுக்கு விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.

இத்தாக்குதலில் பல சிறிலங்காப்படையினர் கொல்லப்பட்டதாகவும், தற்போதும் அப்பகுதிகளில் பாரிய சண்டை தொடர்வதாகவும், விடுதலைப்புலிகளின் கொமாண்டோப்படையினர் பல பகுதிகளைக் கைப்பற்றியிருப்பதாகவும் தெரிய வருகிறது. மேலதிக தகவல்கள் தொடரும் ...
நன்றி>நிதர்சனம்.

2 comments:

Anonymous said...

மன்னாரில் படையினர் மீது அதிரடித் தாக்குதல்: 30 படையினர் பலி- 7 ஆட்டிலெறிப் பீரங்கிகள் தாக்கியழிப்பு

Anonymous said...

மன்னாரில் படையினர் மீது புலிகள் அதிரடித் தாக்குதல்: 30 படையினர் பலி! 40 படையினர் படுகாயம்! 2 பவள் வாகனங்கள் மீட்பு