Friday, June 22, 2007

கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை நியாயமானது: முஸ்லீம் வாத்தகர்.

கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை நியாயமானது என தெரிவித்து கொழும்பில் உள்ள முஸ்லீம் வாத்தகர் ஒருவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் இடையீட்டு மனுவினை தாக்கல் செய்துள்ளார்

கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான இரண்டாம் நாள் விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலையில் இந்த இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

கொழும்பில் சிங்களவர்களை விட அதிகளவில் சிறுபான்மையினரே வாழந்து வருவதாகவும் ஏறத்தாள இரண்டு இலட்சம் சிறுபான்மையினத்தவர்கள் வாழும் கொழும்பில் இருந்து தமது அடையாளங்களை உறுதிப்படுத்த தவறியவர்களம் இருப்தற்கான தகுந்த காரணங்களை முன்வைக்க முடியாதவர்களுமாக 300 பேர் வெளியேற்றப்பட்டமை தவறானது அல்ல என்று அந்த வாத்தகர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்

கொழும்பு வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த கோடீஸ்வர வாத்தகரான டாக்டர் மொகமட் கௌஸ் மொகமட் சுலைமான் சுர்பீக் என்பவரே இந்த இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

-Pathivu-

No comments: