Monday, January 29, 2007

சமாதானத்தை தவிர, அரசுக்கு வேறு வழியில்லை.

இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதுடன் கவனமும் செலுத்துகிறோம். இலங்கை சமாதானமும் அமைதியும் நிலவுமேயாயின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வர் என உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பிரதி தலைவர் பிரபல் பட்டேல் இன்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமாதானத்தை நிலை நிறுத்துவதை தவிர வேறு தேர்வு இல்லை. இலங்கையின் அபிவிருத்தி, புணரமைப்பு பணிகள் சமாதானத்தினை உண்டாக்குவதிலேயே தங்கியுள்ளது.

முழு இலங்கையில் அண்மைய மோதல்களால் மக்கள் இடம்பெயர்ந்து வீடுகளை,கல்வி மற்றும் போதியளவு சுகாதார வசதியின்றி சிரமப்படுகிறார்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் போதியளவு பாதிப்பில்லாத போதும் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பட்டேல் தெரிவித்தார்.

தற்போது எம்மிடம் 750 மில்லியன் டொலர் திட்டமிட்டமுள்ளது. இதில் 25 % நிதி வடக்கு கிழக்கில் வீடமைப்பு பாதிக்கப்பட்ட நீர் விநியோகம் மற்றும் விவசாயம் என்பவற்றிக்கு முதலிடப்படவுள்ளது. எனவே இலங்கையிலுள்ள உள்நாட்டு மோதல்களை முடிவிற்கு கொண்டுவர வேண்டும் என பட்டேல் மேலும் தெரிவித்ததாக ஏ.எப். பி செய்தி தெரிவித்துள்ளது.

THANKS: WWW.VIRAKESARI.LK

1 comment:

Anonymous said...

synonym nasaacontext shareholder cultivate ceftriaxone alpha glitz ngpg rightful telegraphic role
lolikneri havaqatsu