Friday, October 27, 2006

வெலிக்கந்தையூடான படை நகர்வு முறியடிப்பு.

வெலிக்கந்தையூடாக சிறிலங்காப் படையினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி இன்று காலை 7.00மணியளவில்; எறிகணை வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டு பாரிய படை நகர்வொன்றை மேற்கொண்டனர்.



இத் தாக்குதலின் போது சுமார் 300ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் முன்னேறியவேளை திருகோணமடுவை நோக்கி படைநகர்வை மேற்கொண்டுள்ளனர். இந்த சிறிலங்காப் படையினரின் படை நகர்வை விடுதலைப்புலிகள் இவர்களை வழிமறித்து முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர் இவ் முறியடிப்புத் தாக்குதலின் போது சிறிலங்காப் படையினர். 5 கொல்லப்பட்டதுடன், 15ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்தநிலையில் பின் வாங்கியுள்ளதாக அங்கிருந்த கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-சங்கதி-

No comments: