Sunday, October 29, 2006

பேச்சுவார்த்தையில் ஏ-9 பாதையை திறக்கமறுத்தது சிறிலங்கா.

ஜெனீவாவில் இருநாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏ-9 பாதையை திறக்க சிறிலங்கா அரசாங்கம் மறுத்துவிட்டது.
இருநாட்கள் பேச்சுக்குப் பின்னர் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சிறிலங்கா அரசாங்க தரப்புக்குழுத் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோ இதனைத் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
6 இலட்சம் மக்களுக்கான தரைவழிப்பாதையை மூடி அவர்களை சிறைக்கைதிகளைப் போல் உருவாக்கியுள்ள நிலையில் ஏ-9 பாதையை திறக்க வேண்டிக்கொண்ட போதும் அதனை மறுத்துவிட்டது சிறிலங்கா அரசாங்கம்.
இத்தகைய ஒரு சிறிய விட்டுக்கொடுப்பைக் கூட சிறிலங்கா அரசாங்கம் செய்யாதிருப்பது யுத்தநிறுத்த மீறலும் மனித உரிமை மீறலுமாக இருக்கிறது.
சிறிலங்கா அரசாங்கத்தின் விட்டுக்கொடுக்காத போக்கை எடுத்துச் சொல்ல வேண்டிய துரதிர்ஸ்டவசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.
நன்றி>புதினம்.

No comments: