Saturday, October 28, 2006

முதல்நாள் பேச்சுக்களில் எந்த பயனும் ஏற்படவில்லை.

முதல் நாள் பேச்சுக்களில் எந்தப் பயனும் ஏற்படவில்லை என அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் முதல் நாள் பேச்சுக்களில் இரு தரப்பும் அறிக்கைகளை வாசித்ததே பலனுள்ள விடயம் இதனை விட எந்தப்பயனுள்ள இணக்கங்களும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த காலபேச்சுக்களில் ஏற்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்தவும் தற்போதைய பேச்சுக்களில் எட்டப்படும் இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் படி வலியுறுத்தியதுடன் தமிழ் மக்களது மனிதபிமான பிரச்சினைகளை அரச தரப்பின் முன்வைத்ததாகவும் முக்கியமாக 6 லட்சம் மக்களிற்கு பிரச்சினையாகவுள்ள ஏ 9 பாதை திறப்பு விடயத்தை தாம் வலியுறுத்தியதாகவும் அதற்கு அரசதரப்பில் இருந்து எந்த வித பதிலும் கிடைக்கவில்லை.
நாளைய தினம் பாதை திறப்பிற்கான அரசின் சாதகமான பதிலை தாம் எதிர் பார்ப்பதாகவும் ஏ 9 பாதை திறப்பதற்கு சாதகமான பதில் கிடைக்கமால் தொடர்ந்து பேச்சுக்களை நகர்வது சாத்தியம் இல்லை ஏ 9 பாதை மூடப்பட்டது ஒரு அப்பட்டமான யுத்த நிறுத்த மீறல் பாதை திறப்பு விடயத்தில் அரச தரப்பினர் மற்றும் சர்வதேச சமூகம் ஒரு சாதகமான நிலைக்கு வர வேண்டும் என தெரிவித்த தமிழ்செல்வன்

மக்களின் மனிதபிமான பிரச்சினைகளில் அக்கறை காட்டமால் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்ற விடயத்தையே அரச தரப்பினர் வலியுறுத்தி வந்ததாகவும் அப்படியாயின் எவ்வகையான அரசியல் தீர்வை வைத்திருக்கிறீர்கள் என தாம் கேட்டதற்கு பதில் அளித்த அரச தரப்பினர் தற்போது தம்மிடம் எந்த தீர்வு திட்டமும் இல்லை எனவும் இப்போது தான் தாம் எதிர் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்திருப்பதாகவும் விரைவில் அவர்களுடன் இணைந்து தீர்வு திட்டம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்ததாக தமிழ்செல்வன் மேலும் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் இன்றைபேச்சுக்களில் எந்தபயனும் கிட்டவில்லை எனினும் நாளைய தினம் திட்டமிட்டபடி பேச்சுக்கள் நடைபெறும் எனவும் தமிழ்செல்வன் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

No comments: