Thursday, October 26, 2006

ஹியூமன் றைட்ஸ் வோட்ச் வலியுறுத்தல்.

இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பாகிய ஹியூமன் றைட்ஸ் வோட்ச் வலியுறுத்தியுள்ளது.
அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் அண்மையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சர்வதேச சட்டங்களை மதித்து முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
ஜெனீவாப் பேச்சுக்கள் இதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளது. இருதரப்பினரும் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும்.
பிரச்சனைக்குரிய பகுதிகளில் அகதிகளாக உள்ள மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் சென்றடைய இராணுவ மயமாக்கல் நிலை விலக்கப்பட வேண்டும்.
இராணுவ நடவடிக்கைகளுக்கு முன்னராக மக்களுக்கு அது தொடர்பில் ஏதேனும் ஒரு வகையில் அறிவித்தல் விடுக்க வேண்டும்.
இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்புக்குழுவை அமைக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: