Friday, October 27, 2006

முதலில் மனிதாபிமான பிரச்சனைகளை தீர்க்கவேண்டும்.

ஏ-9 பாதை திறப்பு உள்ளிட்ட மனிதாபிமானப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டால்தான் பேச்சுக்கள் வெற்றி பெற்றதாகக் கருதப்படும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஏ-9 பாதை திறப்பு உள்ளிட்ட மனிதாபிமானப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டால்தான் பேச்சுக்கள் வெற்றி பெற்றதாகக் கருதப்படும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பு பேச்சுக் குழுக்களுடன் இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
நாளை தொடங்க உள்ள பேச்சுக்களுக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது.
ஜோன் ஹன்சன் பௌயருடனான சந்திப்புக்கு முன்னதாக ஏ.எஃப்.பி. செய்தி ஊடக நிறுவனத்துக்குக் கருத்து தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், ஏ-9 பாதை திறப்பு உள்ளிட்ட மனிதாபிமானப் பிரச்சனைகளை விவாதிக்க விரும்புகிறோம். வார இறுதிக்குள் மனிதாபிமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டால்தான் பேச்சுக்கள் வெற்றி பெற்றதாக நாம் கருத முடியும். படுகொலைகள் நிறுத்தப்பட்டு இயல்பு நிலைமை திரும்ப வேண்டும் என்றார் அவர்.
சிறிலங்கா அரசாங்கக் குழுவின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

No comments: