Monday, October 16, 2006

போர்களங்களுக்கு அப்பால் இலக்குகள் விரிந்து செல்லும்.

இதுவரை 106 ராணுவம் பலி, 140ராணுவம் காயம்.

தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை சிறிலங்கா இராணுவம் தொடர்ந்து நடத்துகின்ற போது போர்க்களங்களுக்கு அப்பால் சிறிலங்கா இராணுவம் மீது இலக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களை நாம் மறுப்பதற்கில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
ஹபரணை தாக்குதல் தொடர்பாக இ.இளந்திரையனிடம் "புதினம்" செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:
சிறிலங்கா இராணுவமானது தனது இலக்குகளை பல கிலோ மீற்றர்களுக்கு அப்பால் தெரிவு செய்கின்ற போது அந்த இலக்குகளில் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
திருகோணமலை சம்பூர், மூதூரில் தாக்குதல்களை உதாரணமாகக் கொள்ளலாம்.
இன்று திங்கட்கிழமையும் கூட மாலை 5.30 தொடக்கம் 6.30 மணிவரை மாங்குளம், புதுக்குடியிருப்புப் பகுதிகளில் சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபீர் விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றன. தற்போது அந்த இடங்களை பார்வையிடுவதற்கு இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் சென்று கொண்டிருக்கின்றனர்.
இப்படியான நிலையில் மக்களைப் பாதுகாக்க வேண்டியதும் வலுச்சமநிலையை பேண வேண்டியதுமான நிலை எங்களுக்கு உள்ளது.
ஆகவே போர்க்களங்களுக்கு அப்பால் சிறிலங்கா இராணுவம் இலக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களை நாம் மறுப்பதற்கில்லை.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களுக்காக திருகோணமலை மாவட்ட கட்டளைத் தளபதியை தொடர்பு கொண்டிருக்கிறோம் என்றார் இ.இளந்திரையன்.
நன்றி>புதினம்.

No comments: