Tuesday, October 17, 2006

தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட போர்ப் பிரகடனம்:

வடக்கு-கிழக்கு இணைப்பை எதிர்த்து சிறிலங்கா உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து பல்வேறு கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட ஒரு போர்ப் பிரகடனமாக இதனை நாம் பார்க்கிறோம் என்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.
வடக்கு-கிழக்கு இணைப்பின் போது கிழக்கில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்களிடம் ஆலோசிக்கப்படவில்லை. இணைப்பு அல்லது பிரிப்பு தொடர்பில் முஸ்லிம்கள் எதுவித கருத்தையும் முன்வைக்கவில்லை என்றார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம
19 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு பாரிய வரலாற்றுத் தவறை உச்சநீதிமன்றம் திருத்தியுள்ளது என்றார் ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச.
சட்ட ரீதியாக இந்த தீர்ப்பு சரியானதாக இருந்தாலும் இனப்பிரச்சனை தொடர்பில் பாரதூரமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே எச்சரித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது உகந்த நேரமல்ல என்று அமைச்சர்கள் மங்கள சமரவீர, டி.ஈ.டபிள்யூ. குணசேகர, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சரத் அமுனுகம ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்தி: வடக்கு-கிழக்கு இணைப்பு சட்டவிரோதம்: சிறிலங்கா உச்சநீதிமன்றம் தீர்ப்பு
நன்றி>புதினம்.

No comments: