Friday, October 27, 2006

"சிறப்பு தன்னாட்சி": இந்தோனேசியா யோசனை.

இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண சிறப்புத் தன்னாட்சி முறையைக் கையாளலாம் என்று சிறிலங்கவுக்கு இந்தோனேசியா யோசனை தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க, இந்தோனேசிய அரச தலைவர் சுசிலோ பங்க யதோயொனோவை சந்தித்துப் பேசினார். ஜெனீவாப் பேச்சுக்களானது போரை முடிவுக்கு கொண்டு வந்து யுத்த நிறுத்தத்தைக் காப்பாற்றும் என்று நம்புவதாக இந்தோனேசிய அரச தலைவரிடம் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
இலங்கை விவகாரம் குறித்து இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் ஹசன் விரயுத ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:
இந்தோனேசியாவின் ஆர்ச்சே அமைதிப் பேச்சுக்களை முன்மாதிரியாக சிறிலங்கா எடுத்துக் கொள்ளலாம். கடந்த ஓகஸ்ட் மாதம் ஆர்ச்சே விடுதலை இயக்கப் போராளிகள் அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு 29 ஆண்டுகால போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
நிரந்தரமான அமைதி ஏற்பட சிறப்பு தன்னாட்சியை போராளிகளுக்கு அளிக்கலாம் என்று சிறிலங்கா பிரதமரிடம் தெரிவித்துள்ளோம். அதனை அதிகாரப் பகிர்வு என்றும் கூறலாம் என்றார் ஹசன் விரயுத.
நன்றி>புதினம்.

No comments: