Sunday, October 15, 2006

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள்.

கடந்த மாதம் 18ம் திகதி ஜெனிவாவில்,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் இரண்டவாது கூட்டத் தொடர், மெக்சிக்கோ நாட்டின் ஐ. நா. விற்கான தூதுவர், திரு லூயிஸ் அல்போன்சோ டி அல்பா தலைமையில் ஆரம்பமாகியது. ஐ. நா. மனித உரிமை சபை, கடந்த மார்ச் மாதம் 15ம் திகதி, ஐ. நா. பொதுச் சபையின் தீர்மானம் 60Æ251க்கு அமைய, முன்னைய ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு பதிலாக நிறுவப்பட்டது.
ஐ. நா மனித உரிமை ஆணைக்குழு 1946ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ம் திகதி நிறுவப்பட்டது. இவ் ஆணைக்குழு 53 அங்கத்துவ நாடுகளை உள்ளடக்கியதாக இயங்கியது. அண்மை காலங்களில், இவ் ஆணைக்குழுவினால் உலகில் மனித உரிமைகளை கடுமையாக மீறும் நாடுகள் மீது கண்டன தீர்மானங்களை கொண்டுவர முடியாமல் இருந்த காரணத்தினாலும், செயலாளார் நாயகம் திரு கோபி அணானினால் நடைமுறைபடுத்தப்பட்ட, ஐ. நா. செயற்பாடுகளின் மறு சீராமைப்பும், மனித உரிமை சபையை தோற்றுவித்தது.
ஐ. நா மனித உரிமை ஆணைக் குழுவினால், மனித உரிமைகளை கடுமையாக மீறும் நாடுகள் மீது கண்டன தீர்மானங்களையும் கொண்டுவர முடியாமல் இருந்ததிற்கு காரணங்கள் பல மனித உரிமை ஆணைக் குழுவில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களை கொண்ட நாடுகளின் அங்கத்துவம், இவர்களுக்கிடையேயான கூட்டணி, நாடுகளுக்கு இடையேயான பிராந்திய நட்புறவு, அத்துடன் சில நாடுகள் பயங்கரவாததிற்கு எதிரான போரென்று கூறி ஐ. நா. மனித உரிமை தீர்மானங்கைளயும், வழிமுறைகளையும் ஏற்க மறுப்பது போன்றவையே. இதேவேளை செல்வாக்குப் பெற்ற நாடுகள், தமது நாட்டையும், தம்முடன் சேர்ந்த நேச நாடுகளிலும், எவ்வித மனித உரிமை மீறல்களையும் ஐ. நா பரிசீலிக்க முடியாது தொடர்ந்து எதிர்த்து வந்தது.
இச் சாவால்களை முகம் கொடுக்கும் முகமாக தோற்றம் பெற்ற மனித உரிமை சபை, 47 அங்கத்துவ நாடுகளை உள்ளடக்கியதுடன், முன்னைய மனித உரிமை ஆணைக்குழு போல் இங்கும் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களை கொண்ட நாடுகள் அங்கத்துவம் பெற்றுள்ளனர். இதில் சிறிலங்காவும் அடங்கும் என்பது கூறிப்பிடத்தக்கது.
ஐ. நா. மனித உரிமை சபையின் இரண்டவாது கூட்டத் தொடர் ஆரம்பமாகிய அன்றே, ஐ. நா மனித உரிமை ஆணையாளர் திருமதி லூயிஸ் ஆபார் தனது ஆரம்ப உரையில், சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமான முறையில் மீறப்படுவதாகவும், இன்றுவரை சிறிலங்காவில் நடைபெற்ற எந்த படுகொலைகளுக்கும், சிறிலங்கா அரசு எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவுமில்லை, அங்கு யாரும் தண்டிக்கப்படவும் இல்லை என குற்றம் சாட்டினார். இதே வேளை, சிறிலங்காவில் ஓர் நிரந்தர 'சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு குழு" உருவாக்கப்பட வேண்டுமென வழிமொழிந்தார்.
திருமதி லூயிஸ் ஆபாரின் உரையை தொடர்ந்து, மனித உரிமை சபையில் முதல் வாரம் உரையாற்றிய கூடுதலான ஐ. நா வின் விசேட பிரதிநிதிகள், சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை மிகவும் கடுமையாக கண்டித்தனர். இதனால் இச்சiயில் அங்கத்துவம் வகிக்கும் சிறிலங்கா அரச பெரும் சங்கடத்தில் மாட்டிக்கொண்டது. அத்துடன் சில அரச சார்பற்ற நிறுவனங்களும் குற்றச்சாட்டுகளை சிறிலங்க மீது முன் வைத்தன. இவை யாவற்றையும் அரச பிரதிநிதிகள் வழமை போல் நியாயப்படுத்திக் கொண்டனர். மனித உரிமை சபையில் முதல் வாரம் நடத்தவற்றை மனதில் வைத்து, இம் முறை சிறிலங்கா மீது ஓர் தீர்மானம் நிட்சயம் நிறைவேறும் என்பது சகலரது மனதிலும் உறுதியாகிவிட்டது.
இதேவேளை, சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒரு போதும் இல்லாதவாறு புதுமையாக சிறிலங்காவில் சகல தரப்பினரும் மனித உரிமைகளை மீறுவதாகவும், சிறிலங்காவில் ஓர் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு குழு" உருவாக்கப்பட வேண்டுமென பிரச்சாரமும் செய்தார்கள். இது எம்மால் நம்ப முடியவில்லை, காரணம் வழமையாக இதே அமைப்புக்கள் ஒரு பக்கச் சார்பாகத் தான் சிறிலங்காவிடயத்தில் கண்டன அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். மனித உரிமை சபையில் நடப்பவையும், இச் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் சுய நலம் நிறைந்த போலி வேடங்கள் தான் என்பது கூட்டத் தொடரின் மூன்றவது வாரம் தான் தெளிவாகியது.
இராண்டவது வாரத்தில், ஐ. நா. செயலாளார் நாயகத்தின், சிறு பிள்ளைகள் விடயத்தின் விசேட பிரதிநிதி, திருமதி ராதிக்க குமாரசுவாமி உரையாற்றினார். இவர் தனது உரையில் தனது ஆலோசகர் திரு அலன் றொக் என்பவர் சிறிலங்கா செல்ல இருப்பதாகவும், இவர் சிறிலங்கா அரச பிரதிநிதிகளையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளதாக சபையில் கூறினார்.
மனித உரிமை சபையின் கூட்டத் தொடரின் இராண்டவது வாரத்தில், தமது அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படப் போகிறது என்பதை நன்கு அறிந்த சிறிலங்கா அரச பிரதிநிதிகள், பலவிதப்பட்ட ராஜதந்திரிகளையும், சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களையும் சந்திக்க அரம்பித்தனர். இதே வேளை சிறிலங்காவிலிருந்து விசேடமாக சில தமிழ் முஸ்லீம் அமைச்சர்களையும், அரசியல்வாதிகளையும் பிரச்சார வேலைக்கென ஜெனீவா அழைத்தனர்.

இவர்களின் சந்திப்புக்கள் யாவும் ஐ. நா. காட்டிடத்திற்கு வெளியிலேயே நடைபெற்றது. இந்த தமிழ் முஸ்லீம் அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் தாம் சந்தித்தவர்களிடம் வழமை போல் என்ன கூறியிருப்பார்களென்பதை சகலராலும் ஊகிக்க முடியும்.
இப்படியாக சிறிலங்கா பிரதிநிதிகள் சூறாவழிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், ஐரோப்பியா யூனியன் நாடுகளின் முன்னெடுப்பில் பின்லாந்து நாட்டினால் சிறிலங்கா மீதான ஓர் தீர்மானம் தாயாரிக்கப்பட்டு, இதை விவாதிப்பதற்கும், நிறைவேற்றுவதற்குமாக மனித உரிமை சபையில் A/HRC/2/L.37 என்ற இலக்கத்தின் கீழ் தீர்மானத்தை பதிவு செய்து கொண்டனர். இதை கண்டு சிறிலங்கா பிரதிநிதிகள் திகில் அடைந்தனர்.
ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா பிரதிநிதிகளை, மனித உரிமை சபையின் எந்தவித தீர்மானங்களையும் ஏற்கப்படாது என கொழும்பிலிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஏதோ ஒரு விதத்தில் ஐரோப்பியா யூனியனால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை பலம் இழக்கச் செய்ய திட்டமிட்ட சிறிலங்கா அரசு, உடன் சில ஆசிய அயல் நாடுகளுடன்,தமிழ் மக்கள் மீதான தமது மனித உரிமை மீறல்களை அச் சபையில் அலட்சியம் பண்ணும் நாடுகளுக்கு பண்ட மாற்றாக சில பொருளாதார சலுகைகளை சிறிலங்கா முன் வைத்தனர். இந்த அடிப்படையில் ஆயுத ஓப்பந்தம், கைமாற்றாக திருகோணமலையில் சமரும், மத்திய கிழக்கு நாடுகளில் சிறிலங்காவிலிருந்து சென்று வேலை செய்வோரின் சட்ட பிரச்சனைகள் யாவற்றையும் தாம் வாபஸ் பெறுவதாக சிறிலங்கா அரசு மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒப்புதல் கொடுத்தது. அத்துடன் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு எதீரான கண்டன தீர்மானங்களை, மனித உரிமை சபையில் வேறு நாடுகள் முன் வைக்கும் வேளையிலே தாம் அதை வலுவாக எதிர்பது போன்ற விடயங்களை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொண்டது. இவை யாவும் சிறிலங்கா மீது ஐ. நா. மனித உரிமை சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வெற்றி கொள்வதற்காகவே பேரம் பேசப்பட்டது.
இதில் மிக வேடிக்கை என்னவெனில், 87, 88, 89ல் தெற்கில் சிங்கள இளைஞர்கள் காணமல் போயிருந்தமைக்கு, 91ல் ஐ. நா. விடம் நியாயம் கேட்டு எம்மை போன்று ஜெனிவாவில் பிரச்சாரம் செய்ய வந்த அதே ராஜபக்சா தான் இக் கட்டளையையும் பிறப்பித்தார். ஜனதிபதி ராஜபக்சாவை பொறுத்தவரையில் தெற்கில் காணமல் போன சிங்கள இளைஞர்கள் கண்டுபிடிப்பதற்கும், விசாரணை செய்வதற்கும் ஐ. நா. உதவி தேவை, ஆனால் தமிழ் மக்களது மனித உரிமைகளை தனது பாதுகாப்பு படையினரும், ஒட்டுப்படையினரும் மீறுவதை உள்நாட்டு பிரச்சனையாக கொள்கிறார்! இது தான் மகிந்த சிந்தனையா?
சிறிலங்காவின் கைப்பொம்மையாக மிக நீண்ட காலமாக திகழ்ந்த ஐரோப்பியா யூனியன், ஆசிய நாடுகளின் உதவியுடன் சிறிலங்காவின் எதிர்ப்பை கண்டு திகைத்தது. காரணம் ஐ. நா. மனித உரிமை சபையில் ஐரோப்பியா யூனியனுக்கு எந்தவித பெரும்பான்மையும் கிடையாது. இவர்களால் சிறிலங்கா மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மனித உரிமை சபையில், ஒரு போதும் வாக்கெடுப்பிலும் நிறைவேற்;ற முடியாது. அதிருப்தி அடைந்த சில ஐரோப்பிய ராஜதந்திரிகள், தம் மீது சிறிலங்கா சாவாரி செய்வதாக கூறினார்கள். தற்பொழுது இத் தீர்மானம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கூட்டத் தொடருக்கு பின் தள்ளிப் போடப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கிடையில், சிறிலங்கா விடயத்தில் மிக அக்கறை காட்டியது போல் நடித்த சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களை, சிறிலங்கா பிரதிநிதிகள் கொழும்புக்கு வந்து தமது வெளிநாட்டு அமைச்சர், ஜனதிபதி போன்றோரை சந்திக்க அழைத்துள்ளனர். ஏதற்காக? வழமைபோல் தமிழ் மக்கள் மீதான தமது மனித உரிமை மீறல் விடயத்தில், இவர்களுடனும் பேரம் பேசுவதற்காகவா! சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் எதிர்பார்த்தது இதை தானே.
ஆகையால் எதிர்வரும் நவம்பர் மாத மனித உரிமை சபையின் கூட்டத் தொடரில், சிறிலங்கா பற்றி என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் ஆராய்வோமானால் சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் கொழும்பு சென்று வருவதானால், இவர்கள் சிறிலங்கா அரசின் புதிய திட்டங்களுடன் வருவார்கள், ஏற்கனவே ஐரோப்பியா êனியனால் தாயாரிக்கப்பட்ட தீர்மானம் A/HRC/2/L.37 வாபஸ் பெறப்பட்டு, இதற்கு பதிலாக வேறு மாற்றுத்திட்டங்கள் தயாhரகாலாம். அது வழமைபோல் ஒரு பக்கச் சார்பான குழுவாகவே இருக்கும் ஆனால் 'தனிப்பட்;ட சுதந்திரமான குழு" என்ற பெயரில்,சிறிலங்காவில் மனித உரிமை கண்கணிப்பு வேலைகளில் ஈடுபடலாம். இது வியாபர நோக்கம் கொண்ட பக்கச் சார்பன குழவாகவே அமையும். இப்படியாக ஒன்று உருவகும் பட்சத்தில் அதை எதிர்பதும், நடைமுறைப்படுத்த விடாது தடுப்பதும் புலம் பெயர் வாழ் தமிழ் மக்களின் கைகளிலேயே உள்ளது.
உண்மையில் ஐ. நா மனித உரிமை ஆணையாளர் திருமதி லூயிஸ் ஆபார் தனது ஆரம்ப உரையில் கூறியதும் நடைமுறைப்படுத்த எண்ணியதும் வேறு, எதிர்வரும் நவம்பர் மாத மனித உரிமை சபையின் கூட்டத் தொடரில், சிறிலங்கா விடயத்தில் நடக்க இருப்பது வேறு. சுருக்கமாக கூறுவதானால், தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் ஜெனிவாவில் ஏலத்தில் விற்பனையாகிறது.
நன்றி>பதிவு.

No comments: