Thursday, October 26, 2006

காலித்துறைமுகத்தில் பாரிய வெடிச்சத்தம்.-மக்கள் ஓட்டம்.

காலித் துறை முகத்துள் நேற்றுப் பிற்பகல் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டது. மக்கள் கடைத் தெருக்கள் மற்றும் அலுவலகங்களைவிட்டு ஓடியுள்ளனர். கடும் பதற்றம் நிலவியது.
காலி துறைமுக கடற் பிரதேசத்தில் கடற் படையினர் மேற்கொண்ட ஒத்திகையொன்றை அறியாத பொது மக்கள் அச்சமடைந்து காலி நகரத்தைவிட்டு தப்பியோடிய அதே சமயம்இ கடைகள் இ வர்த்தக நிலையங்கள்இ அரச அலுவலகங்கள் இழுத்து மூடப்பட்டு பிற்பகல் 4 மணி வரை நகரம் வெறிச்சோடியது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வந்து தாக்குதல் மேற்கொள்வதாகவும் கராப்பிட்டி வைத்தியசாலைக்கு காயடைந்தவர்கள் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தொலை பேசி மூலமாகவும் வேறு விதத்திலும் தகவல் பரவியதால் வைத்தியர்கள் தயார் நிலையில் இருந்துள்ளனர். பொலிசார் வந்து மக்களை தடுத்து நிறுத்தியும் மக்கள் உயிர் தப்பினால் போதும் என்று வீடு வாசல்களைவிட்டு ஓட்டமெடுத்தனர். பிற்பகல் 4 மணியிற்க்குப் பின்னரே கடற்ப்படையினரின் ஒத்திகையே இதுவென அறிந்த மக்கள் தங்கள் சொந்த இடத்திற்க்குத் திரும்பினர்.
கடற் படையினர் பாரிய வெடிச் சத்தங்களுடன் கடற் படைப் படகுகள் கடலில் அங்குமிங்கும் விரைந்து சென்று கடும் மோதலில் ஈடுபடுவது போன்று பாரிய ஒத்திகையை மேற் கொண்டனர்.
நன்றி>புதினம்.

1 comment:

NONO said...

hahahaha....!