Thursday, July 19, 2007

தமிழீழ தனியரசை நிறுவும் வேலைகளை புலிகள் திறம்பட முன்னெடுக்கின்றனர் - ஜேன்ஸ் சஞ்சிகை!!!

தமிழீழ தனியரசை நிறுவுவதற்கான வேலைத் திட்டங்களை விடுதலைப் புலிகள் திறம்பட முன்னெடுத்து வருவதாக ஜேன்ஸ் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் பரந்து விரிந்து நிற்கும் விடுதலைப் புலிகளின் வலைப்பின்னல் அவர்களின் தமிழீழ தனியரசு என்ற இலக்கினை அடைவதற்கு உறுதுணையளிப்பதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பலம் வாய்ந்த போராட்ட குழுவாக விடுதலைப் புலிகள் திகழ்வதற்ககு அவர்களின் கட்டுக் கோப்பான உலகளாவிய வலையமைப்புகளே காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிக நுட்பமாக தமது நிதி ஆதாரங்களை தேடும் விடுதலைப்புலிகள் அவற்றை சரியான முதலீடாக மாற்றவும் தேவை ஏற்படும் போது அதி நவீன ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு அந்த நிதி மூலங்களை பயன்படுத்தவும் வசதி படைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திட்டமிட்ட நிதி முகாமைத்துவம் ஆயுதக் கொள்வனவிற்கான அவர்களின் நகர்வுகள் அபாருத்தமான நிதி முதலீடுகள் தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள ஆழுமை என்பன அவர்களை மாறுபட்ட போராட்ட அமைப்பாக வெளிப்படுத்தி நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>பதிவு.

No comments: