Saturday, July 14, 2007

லண்டனில் ஜூலை 14, இன்று மாபெரும் பேரணி

ஈழத் தமிழர் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி லண்டனில் இன்று சனிக்கிழமை (14.07.07) நடைபெறவுள்ளது.


இக்கண்டனப் பேரணியினை ஒழுங்கு செய்துள்ள பிரித்தானிய நகராட்சி மன்றக்குழுவும் அங்கத்தவர்களும் ஏனைய தமிழ் அமைப்புக்களும் விடுத்துள்ள அறிக்கை:


ஈழத் தமிழர் மீதான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்ளைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி

காலம்: சனிக்கிழமை (14.07.07)
நேரம்: முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 2.30 மணிவரை

இடம்:

ரவல்கர் சதுக்கம் (Trafalgar Square) - இலண்டன்
(நிலக்கீழ்த் தொடரூந்து நிலையங்கள்: Charing Cross, Leicester Square and Piccadilly Circus)

காலத்தின் தேவை - இது எங்கள் தேசியக் கடமை

வாய் பேசாது இருந்தால்
வந்த இடத்திலும் சொந்த இடம் போலே மனித உரிமை மீறப்பட்டு
நாம் அடக்கப்படுவோம்.
உலகிலேயே அழிக்கப்படுவோம்.

எனவே பெருந் திரளாக வாருங்கள். உங்கள் குடும்பத்தவர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும்
அழைத்து வாருங்கள்.

எமது தொப்புள்க்கொடி உறவுகள் மீதான அழிவைத் தடுத்து நிறுத்துவோம்.

ஒரே அணியிலே நின்று ஒரே குரலிலே உலகிற்கு எடுத்துரைப்போம்!

எமது சுதந்திரத்திற்காக நாம் குரல் கொடுப்பது குற்றமல்ல.

ஒழுங்கமைப்பு: பிரித்தானிய நகராட்சிமன்ற உறுப்பினர்கள் குழுவும் அங்கத்தவர்களும் ஏனைய தமிழ் அமைப்புகளும்.

தொடர்புகளுக்கு:

07812028741/ 07967565477 13 Cambridge Rd, Harrow, HA2 7LA

மின்னஞ்சல்: Tamils4peace@aol.com

-புதினம்

No comments: