Saturday, July 14, 2007

புலிகளின் அறிவித்தலை அடுத்து சிறீலங்கா பொருளாதராத்தில் பாரிய தாக்கம்!!!

ஸ்ரீலங்காவின் பொருளாதார நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளமை ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று தீடிரென வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் பெறுமதி 111 ரூபா 80 சதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்னும் சில தினங்களில் டொலரின் பெறுமதி 120 ரூபாவரை உயர்வடையும் என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை பங்கு பரிவர்தனையும் நேற்றைய தினம் மிகவும் மந்தமடைந்துள்ளதாக பங்கு சந்தை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் அறிவித்தலுக்கே பொருளதார தளம்பல் நிலை உணரப்புடும் நிலையில் அறிவித்தபடி பொருளாதார நிலைகள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தினால் இலங்கையின் பொருளாதார நிலை மிகவும் மோசமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி>பதிவு

No comments: