Sunday, November 04, 2007

அனைத்துலகத் தொடர்பகம் வெளியிட்ட அறிக்கை!

04.11.2007

அனைத்துலகத் தொடர்பகம்

தமிழீழம்

தேசியத்தலைவர் அவர்களின் வலதுகரமாகத் திகழ்ந்த அரசியற்றுறைப்பொறுப்பாளரும் பெரும் படைத்துறைத் தளபதியும் அனைத்துலகமட்ட இராஐதந்திரியுமாகிய பிரிகேடியர் தமிழ்ச்செல்வனை இழந்துவிட்டோம்.

நயம்பட உரைத்த நா ஓய்ந்துவிட்டது. புன்னகை குன்றா சிரிப்பின் செல்வன் இன்று வரலாறாகிவிட்டார். எமது ரணத்திற்கு நாமே மருந்தாவோம், குறி தவறோம்.

நாம் நலிந்து விட்டோம் என்று எண்ணக்கூடாது. நாம் வீழமாட்டோம், துணிவை இழக்கமாட்டோம், இலட்சியப் பாதையிலிருந்து விலகமாட்டோம். எமது போராட்டம் வலிமையானது.

மலை போன்ற எம்மவர் மறைந்துவிட்டார் என்பதற்காக நாம் உறுதி தளரமாட்டோம். அவர் சிந்திய குருதியின் மீது ஆணை. எமது இலட்சியப் போர் வீரியத்துடன் தொடரும், சாதனைகளை அறுவடைசெய்யும்.

தமிழீழ விடுதலைப் போர் எத்தனையோ சவால்களை இதுவரை எதிர்கொண்டுள்ளது.அத்தனையையும் முறியடித்துள்ளோம். இதற்கு எமது இலட்சிய உறுதிதான் காரணம். தமிழனுக்கு வீரத்தையும், விடுதலைப்பற்றையும் ஊட்டிய உறுதியின் உறைவிடமான தலைவர் இருக்கிறார்.

நாம் தலை குனிந்ததில்லை, உறுதி தளர்ந்ததில்லை. எந்த சக்தியையும் கண்டு பயந்துவிடப் போவதுமில்லை. எதுவித ஐயப்பாட்டிற்கும் இடமில்லாமல் போராட்டம் இன்னமும் வீச்சாகத்தொடரும்.

விடுதலை என்பது இரத்தம் சிந்திப் பெற்றுக்கொள்ளப்படும் புனித உரிமை. வெற்றியைத் தீர்மானிப்பது அசையாத மனவுறுதியும் வீரமும் விடுதலைப்பற்றுமாகும்.

தமிழீழ இலட்சியப் பாதையில் நாம் சந்தித்த சவால்கள் எத்தனை, எத்தனை. அத்தனைக்கும் தடை உடைத்து விடை கண்டுள்ளோம். எண்ணரும் புலிவீரர்கள் முப்படையில் அணிவகுத்து நிற்கின்றனர்.

எந்தச்சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது. இனிய உறவுகளே! சோர்வை விலக்குவீர், போராட்டம் வீறுகொண்டெழும் எமது பலம் குன்றவில்லை. விழி நீரைத் துடைத்தபடி நாம் போருக்குச் செல்கிறோம். புலத்தமிழர்களே எழுச்சி கொண்டு எம் தேசத்தலைவருக்குப் பலம் சேருங்கள்.

எமது தமிழீழ இலட்சியம் விரைவில் நிறைவேறும். இதுதான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான வீரவணக்கமாகும்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.

No comments: