Friday, November 16, 2007

தமிழர் புணர்வாழ்வு கழகத்தின் பண முடக்கம் தமிழர்களுக்கு எதிரானது!!!

த.பு.கழகத்தின் பண முடக்கம் தமிழர்களுக்கு எதிரானது அல்லவாம் - பிளேக் கூறுகிறார்
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதி முடக்கம் தமிழ் மக்களிற்கு எதிரான செயலல்ல என, சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் புதிய விளக்கமளித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு நிதி சென்றடைவதைத் தடுப்பதற்கே தமது அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும், இதனை தமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கையாகக் கொள்ள வேண்டாம் எனவும், நிதி முடக்கம் தொடர்பாக இன்று கேட்டபோது அவர் கூறினார்.

அமெரிக்கத் தூதுவரின் இந்தக்கூற்று தொடர்பாக கருத்துரைத்த கொழும்பின் பிரபல ஆய்வாளர் ஒருவர், தமிழ் மக்களிற்கான பிரதான மனிதநேய அமைப்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இயங்கிவரும் நிலையில், பிளேக்கின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனச்சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு, உள்நாட்டு மனிதநேய அமைப்புகள் பணியாற்ற முடியாத பல இடங்களில் தமிழ் மக்களிற்கான பணியை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆற்றி வருகின்றது.

இதேவேளை, இனப்பிரச்சினைக்கான தீர்வை சமாதானப் பேச்சுவார்த்தையின் மூலமே காண முடியுமெனவும், சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் இன்று மீண்டும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காண முடியுமெனக்கூறும் அமெரிக்கத் தூதுவர், விடுதலைப் புலிகளின் பேச்சுக்குழுவின் தலைவர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்டபோது எந்தவித கண்டனத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி>பதிவு.

1 comment:

Anonymous said...

உலக பயங்கரவாதி அமெரிக்காவிற்கு எதிராக எதிரிகள் அதிகரித்து செல்கின்றன, முஸ்லீம் சகோதர்களுடன் இணைந்து தமிழர்களும் இப்போராட்டத்தில் விரைவில் இணைவார்கள்.