

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழகத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்த இந்திய மத்திய அமைச்சர் இளங்கோவனைக் கண்டித்து கோபியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோபி பேரூந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட துணைச் செயலாளர் கந்தசாமி, பெரியார் திராவிடர் கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் இராம இளங்கோவன், கொங்கு இளைஞர் பேரவையின் ஆறுமுகம் உள்ளிட்ட 30 பேர் கலந்து கொண்டனர்.
இளங்கோவனைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதன் பின்னர் இளங்கோவன் கொடும்பாரியை தமிழின உணர்வாளர்கள் எரிக்க முயற்சித்தனர். அதனைக் காவல்துறையினர் தடுத்தனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் கொடும்பாவி கொளுத்தியதாகவும் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
நன்றி>பதிவு.
No comments:
Post a Comment