Saturday, November 10, 2007

லண்டன் தடுப்பு முகாமில் வைத்து கருணா நையப்புடைக்கப்பட்டார்?

லண்டன் தடுப்பு முகாமில் வைத்து கருணா நையப்புடைக்கப்பட்டார்? உடலில் கண்டல், கீறல் காயங்களாம்!

லண்டனில் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கருணா அந்தத் தடுப்புக் காவலில் இருந்த வேறு இலங்கைத் தமிழர்களின் குழு ஒன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கின்றார்.

இதனால் உடலில் கண்டல் மற்றும் கீறல் காயங்களுடன் வேறு பாதுகாப்பான தடுப்புக்காவல் பிரிவுக்கு அவர் மாற்றப் பட்டிருக்கின்றார்.

இவ்வாறு கொழும்பு சிங்கள நாளிதழ் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டிருக்கின் றது.
சிங்களப்பெயர் ஒன்றுடனேயே கருணா லண்டனில் கைதானார். பின்னர் லண்ட னில் தஞ்சம் கோரியோரைத் தடுத்து வைத் திருக்கும் கேம்பிரிட்ஜ் தடுப்பு முகாமில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அச்சமயமே அங்கு தடுத்து வைக்கப் பட்டிருந்த பிற இலங்கைத் தமிழர்களின் குழு ஒன்றினால் அவர் நையப்புடைக்கப் பட்டிருக்கின்றார் என லண்டன் நகர வட் டாரங்கள் கூறுகின்றன.

இதனையடுத்து முகாமின் வதிவிட டாக்டருக்குப் புறம்பாக வெளியிலிருந்து ஒரு டாக்டர் அழைக்கப்பட்டு கருணா வுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னரே வேறு பாதுகாப்பான தடுப்புக் காவலுக்கு அவர் மாற்றப்பட்டார்.
இப்படி அந்தப் பத்திரிகைச் செய்தி தெரிவித்தது. (சி)

--Uthayan.com-

No comments: