Wednesday, November 21, 2007

துக்ளக் வாரப் பத்திரிகைக்கு ஐரோப்பா வாழ் தமிழர்கள் தீவைப்பு!!!


ஈழத் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகத் தனது துக்ளக் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவரும் சோ ராமசாமி, சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு..ப. தமிழச்செல்வன் குறித்து 21.11.2007 அன்று வெளிவந்த துக்கள் வார இதழில் விஷமத்தனமான தலையங்கம் எழுதியதால் ஆத்திரமுற்ற தமிழர்கள் பாரிஸ் கடைகளுக்கு வந்திருந்த துக்ளக் பத்திரிகைகள் அனைத்தையும் வீதியில் போட்டுக் தீயிட்டு கொழுத்தினர்.

அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள தமிழ் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தமது நிறுவனங்களில் துக்ளக் பத்திரிகையை விற்பனை செய்வதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளனர்.
நன்றி>பதிவு.

2 comments:

மிதக்கும்வெளி said...

வரவேற்கிறேன்.

Anonymous said...

அருமை., குப்பை துக்குளக் !
தமிழக விற்பனையாளர்களும் இப்படி ஒரு முடிவு எடுத்தால் அருமையாக இருக்கும்.