Thursday, November 22, 2007

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது சிறிலங்கா!!! We Wish You a Merry Christmas - U.S Gift to Ealam Tamils.



தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை காலை ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச எழுப்பியெ கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது:

அமெரிக்காவில் கடந்த 15 ஆம் நாள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கமும் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களை அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து வருகின்றது. அரசாங்கத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறுகளை அந்நிறுவனங்கள் ஏற்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
நன்றி>புதினம்,யாழ்.காம்.

No comments: