Friday, November 30, 2007

மலேஷியத் தமிழரின் ஆன்ம வழிகாட்டியாக காந்திக்குப் பதிலாக மேதகு பிரபாகரன் வரலாம். - மலேசிய தமிழ் பேராசிரியர்

மலேசியாவில் தாங்கள் இனரீதியாகப் பாகுபாடு காட்டபட்டு ஒதுக்ப்படுகின்றார்கள் எனத் தெரிவித்து, அதற்கு ஆட்சேபனைகளை வெளிப்படுத்தும் வகையில், அஹிம்சைப் போரின் பிதாமகரான மஹாத்மா காந்தியின் உருவப்படங்களைத் தாங்கியபடி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஞாயிறன்று அங்குள்ள இந்திய வம்சாவளித் தமிழர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தினர்.

'இந்த மக்களின் நியாயமான ஆதங்கங்கள் தொடர்ந்தும் கவனிக்கப்படாமல் அவர்கள் புறக்கணிக்கபடுவார்களாயின் அந்த மக்களின் ஆதர்ச வழிகாட்டியாக மஹாத்மா காந்திக்குப் பதிலாக மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் விரைவில் வருவார்." இப்படி மலேசியாவின் கெபன்காஸன் பல்கலைக்கழகத்தின் சரித்திரத்துறையின் முன்னாள் பேராசிரியர் பி. இராமசாமி எச்சரித்திருக்கின்றார்.

சிங்கப்பூரின் டி.என்.ஏ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

2003 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் அவர்களது அரசமைப்பு விவகாரம் ஆலோசனைக் குழுவுக்கு நியமிக்கப்பட்டவர்களில் மலேசிய நாட்டவரான பேராசிரியர் இராமசாமியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய அரசின் கொள்களைக் கடுமையாக விமர்சித்து வந்ததால் அவரது பல்கலைக்கழக சேவை துண்டிக்கபட்பட்டுவிட்டதாகக
கூறப்படுகின்றது.

"மலேசிய அரசு தனது இன ஒதுக்கல் கொள்கையைத் தீவிரமாகத் தொடருமானால் இங்குள்ள தமிழரின் பிரச்சினைகளைக் கையாளும் விடயத்தைத் தீவிரப்போக்கு அணிகள் கையேற்கும் உண்மையான ஆபத்து நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

'இன்று (இங்கு) இந்திய வம்சாவளியினரின் கட்டமைப்பு நலிவுற்று, இறுக்கமற்றதாகவும், அவர்களது எண்ணங்கள், திட்டங்கள் வலிமையாக வரையறுக்கப்படாமலும் இருக்கலாம். ஆனால் பொலிஸ் மூலம் அதனைக் கட்டுப்படுத்த முற்பட்டடால் பதிலடி நடவடிக்கை மோசமாகும்." என்றகிறார் அவர்.

'ஆர்ப்பாட்க்காரர்களுக்கு எதிராக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவி விடப் போவதாக அரசு கூறுகிறது. அப்படி நேருமானார் அது மேற்கண்ட மோதல் நிலைமையையே ஏற்படுத்தும்." என்றும் அவர் கூறினார்.

அடக்குமுறை தீவிரமானல் வன்முறைக் கிளர்ச்சிப் பாதையே கடைசி மார்க்கமாக நாடப்படும் ஆபத்து இருப்பதைத் தாம் உணர்கிறார் என்று இவ்விடயங்களில் நீண்ட கால அவதானியான மலேசியப் பத்திரிகையாளர் பிரண்டன் குப்புசாமி கூறுகிறார்.

'அவர்கள் தலையைத் தொடர்ந்து சுவரோடு மோதிக் கொண்டிருக்கிறர்கள். ஏதோ ஒரு வடிவிலான புரட்சி ஏற்கனவே பீறிடத் தொடங்கிவிட்டது. வன்முறைப்பாதை பொதுவாகப் பகிரங்கமாகப் பிரஸ்தாபிக்கப்படவில்லை. ஆனால் தனிப்பட்ட சந்திப்புகளால் அது குறித்துக் குரல் எழுப்பப்படுகின்றது." என்றார் குப்புசாமி.

இந்தப் பின்னணியிலே புலம் பெயர் நாட்டுத் தமிழர்களின் புலிகள் ஆதரவுப் போக்கு முக்கியத்துவம் பெறுவதாகக் கூறப்படுகின்றது.

மலேசியத் தமிழர்கள், தமிழீழப் போராட்டத்துக்கு செயலூக்கம் மிக்க பங்காளர்கள் என்கிறார் பேராசிரியர் இராமசாமி.

"மலேசிய வாழ் இந்தியர்கள் பிரபாகரன் பால் பற்றுள்ளவர்கள். இங்குள்ள தமிழ் பத்திரிகைகள் பிரபாவைத் துதிக்கினறன". என்றார் குப்புசாமி.

'அப்படியானால் தமிழீழ விடுதலப் புலிகள் போன்ற இயக்கம் ஒன்று மலேசியாவில் தோன்றும் ஆபத்து உண்டா?" என்று அவரிடம் கேட்ட போது -

'இந்திய வம்சாவளியினரின் போரட்டம் பற்றிய எனது ஆய்வறிவின்படி தற்போதைய தலைமை - தீப்பொறி போன்ற சட்தரணி உதயகுமாரின் தலைமை - மிகத் தீவரப் போக்குடையது. பெரிய ஆபத்துகளை எதிர் கொள்ளத் தயாரானது. நீதிமன்றக் கைது உட்பட, ஆனால் அந்த நிலைப்பாட்டில் இருந்து ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் வரை செல்வதற்கு நீண்ட தூரம் கடக்க வேண்டும்." என்று கூறும் குப்புசாமி, இத்தகைய பாய்ச்சலுக்கு இந்தத் தலைமையால் முடியாது எனத் தாம் நம்புகின்றார்' எனவும் குறிப்பிட்டார்.

'எனினும் வரும் வருடங்களில் குழுக்கள் பிரிந்து சென்று இன்னும் தீவிரம் போக்கை வெளிப்படுத்தலாம். ஆகவே அதற்கான (புலிகள் போன்ற ஆயுத இயக்கம் தோன்றுவதற்கான) வாய்ப்பு நிலவத்தான் செய்கிறது.' என்றார் அவர்.

ஆனால், மலேசியாவில் இந்திய வம்சவாளித் தமிழருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை இந்தியாவுக்கும் தான் தலையிடியை ஏற்படுத்தியிருப்பாதகக் கூறப்படுகின்றது.

1980 களில் இலங்கையில் தமிழர் விவகாரம் ஏற்படுத்திய கட்டாயங்கள் போன்ற சூழலை மலேசியாவில் இப்போது இந்தியத் தமிழ் வம்சாவளியினருக்கு நேர்ந்துள்ள நிலைமை அச்சொட்டாக இந்தியாவுக்கு ஏற்படுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

நன்றி> சுடர் ஒளி

1 comment:

Anonymous said...

30 வருடங்களின் முன் சிறீலங்கா அரசு எடுத்த முடிவினை மலேயா அரசு எடுக்காது என நம்புவோம், மலேயா தமிழருக்கு உலகத்தமிழரின் ஆதரவு முற்று முழுதாக இருக்கும், இது உறுதி.