Wednesday, November 21, 2007

கொழும்பில் பாகிஸ்தானின் இரு யுத்தக் கப்பல்கள்!!!

கொழும்பில் பாகிஸ்தானின் இரு யுத்தக் கப்பல்கள்: கடற்பாதுகாப்பு குறித்து இரு தரப்பும் ஆராய்வு!!!

பாகிஸ்தானிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு யுத்தக் கப்பல்கள், கொழும்பு துறைமுக கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளன.

சாஜஹான், நாசார் ஆகிய இரு பாகிஸ்தானிய யுத்தக் கப்பல்களும், எரிபொருள் நிரப்புவதற்காகவே கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்பதாக, சிறீலங்கா அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து கருத்துரைத்திருக்கும் சிறீலங்கா கடற்படை தளபதி,

இரு நாட்டுக் கடற்படையினருக்கும் மத்தியில் நல்லெண்ணத்தையும், உறவையும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் கொழும்பு துறைமுகத்திற்கு இரு பாகிஸ்தானிய யுத்தக் கப்பல்களும் வருகை தந்ததாகவும்,

பாகிஸ்தானுடைய கடற் படையினருடன் போர் ஒத்திகைகளில் ஈடுபடும் எண்ணம், தமது கடற்படையினருக்கு கிடையாது என்றும் கூறியுள்ளார்.

இற்றைவரைக்கும் இந்திய - அமெரிகக் கடறப் டைகளுடன் மட்டும் தமது கடற்படையினர் போர் ஒத்திகைகளை மேற்கொண்டிருந்ததாகவும், இந்த நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும், சிறீலங்கா கடற்படை தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இரு பாகிஸ்தானிய யுத்தக் கப்பல்களில் பயணிதத் கடற்படை அதிகாரிகள், இன்று சிறீலங்கா கடற்படை தளபதிகளை சந்தித்து, கடற் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

பாகிஸ்தானுக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் தரித்ததைத் தொடர்ந்து. பலவேறு சந்தேகங்கள் படைத்துறை வல்லுனர்களால் வெளியிடப்பட்டு வருகின்றன.

எரிபொருள் நிரப்புவதற்காகவே பாகிஸ்தானின் இரண்டு கப்பல்கள் தமது துறைமுகத்தில் தரித்ததாக சிறீலங்கா கடற்படைத் தளபதி கொழும்பில் கூறியுள்ள போதிலும், அதனை நம்ப முடியாது இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்களைப் பகிரங்கமாகப் பெற்றுக்கொண்டால் இந்தியாவுடன் முரண்பட வேண்டியநிலை ஏற்படும் என்பதால், சிறீலங்கா அரசு இரகசிய ஆயுதக் கொள்வனவை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
நன்றி>பதிவு.

No comments: