Wednesday, December 12, 2007

உலக வரைபடத்தில் ஈழத்தை குறித்துக் காட்டியுள்ள "தி எக்கொனமிஸ்ற்" சஞ்சிகை!!!

உலகு எங்கும் மிகவும் பிரபல்யம் பெற்ற "தி எக்கொனமிஸ்ற்" என்ற சஞ்சிகை முதற்தடவையாக தமிழீழத்தின் வரைபடத்தை உலக வரைபடத்தில் குறிப்பிட்டு வரைந்துள்ளது.
இத்தகவலை கொழும்பில் இருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" என்ற வார ஏடு வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"தி எக்கொனமிஸ்ற்" சஞ்சிகையின் டிசம்பர் 6 ஆம் நாளுக்கான பதிப்பில் ஈழத்தை இறைமையுள்ள நாடாக இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகியவற்றுடன் குறிப்பிட்டுள்ளது.


http://www.economist.com/displaystory.cfm?story_id=10251282

குறிப்பாக வரைபடத்தில் உள்ள ஏனைய இறைமையுள்ள நாடுகளைப் போன்று ஈழத்திற்கும் வர்ணம், அளவுகள், அமைப்புக்கள் கொடுத்து வரையப்பட்டுள்ளன.

முன்னர் அப்பகுதி "விடுதலைப் புலிகளால் உரிமை கோரப்படும் பகுதி" என தெரிவிக்கப்படுவது உண்டு.

குஜராத்தில் நரேந்திர மோடி மீண்டும் தேர்தல் நடத்தக் கோருவது தொடர்பாகவே "இந்தியப் படுகொலைகளை குறிப்பிடவில்லை" என்ற தலைப்பில் கட்டுரை வரையப்பட்டுள்ளது.

இக் கட்டுரை அச்சஞ்சிகையின் 47 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது. இப்பக்கத்தில் தான் ஈழத்தின் வரைபடமும் வரையப்பட்டுள்ளது.

எனினும் 48 ஆம் பக்கத்தில் மற்றுமொரு பத்தியில் சிறிலங்கா தொடர்பாக எழுதப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

1 comment:

கோவி.கண்ணன் said...

மோடியின் குஜராத்தை எதுக்கு காவிக்கலரில் ரவுண்டு கட்டி இருக்காங்க ?