Sunday, December 09, 2007

தமிழக காங்கிரசை தூண்டிவிடுவது இந்திய மத்திய உளவுத்துறையே: அம்பலப்படுத்தியது ஜூனியர் விகடன்!

தமிழீழத் தமிழர்களுக்கு ஆதரவாக தாய்த் தமிழக உறவுகள் கிளர்ந்தெழுவதை சகிக்க முடியாத இந்திய மத்திய உளவுத்துறை, தமிழக காங்கிரஸ் கட்சியினரை தூண்டிவிட்டு வருவதை தமிழ்நாட்டிலிருந்து வாரமிருமுறை வெளிவரும் பிரபல ஏடான "ஜூனியர் விகடன்" அம்பலப்படுத்தியிருக்கிறது.
ஜூனியர் விகடனின் 12.12.07 அன்று வெளிவந்த பதிப்பின் செய்தி விபரம்:

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஊடக மாநாடு நடத்திய காங்கிரசின் முன்னாள் எம்.எல்.ஏவான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்,

சமீபத்தில் கொல்லப்பட்ட சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்குப் பின்னால் அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் கரங்களே இருக்கிறது என்று ஒரு குண்டைப் போட்டார்.

இலங்கையிலிருந்து வந்த அவருடைய நண்பர்கள் சிலர், இயக்கத்தில் தமிழ்ச்செல்வனின் அதீத வளர்ச்சி பிரபாகரனுக்குப் பிடிக்கவில்லை. அதன் பின்னணியில்தான் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டிருக்கிறார்... என்றார்களாம்.

மத்திய உளவுத்துறையில் இருக்கும் நண்பர்களிடமும் இதுபற்றி பேசினாராம். அப்புறம்தான் இந்த குண்டை எஸ்.ஆர்.பி. வீசியதாக அவர் வட்டாரம் சொல்கிறது.

கூடவே எஸ்.ஆர்.பி., தமிழக அரசையும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார் என்று ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: