Monday, September 03, 2007

விடுதலைப் புலிகளுக்கு எரித்தேரியா உதவி - அமெரிக்க செனற் சபை குற்றச்சாட்டு!!!




தமிழீழ விடுலைப் புலிகளுக்கு எத்திரியா அரசாங்கம் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க செனற் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கம் ஆயுதக்குழுக்கு உதவிகளை வழங்குவது ஜனநாயக விரோத செயற்பாடுகள் என்றும் இவ்வாறான செயற்திட்டங்களை எத்திரியா அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அமெரிக்க செனற் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளில் உறுப்பினராகவுள்ள ஒரு நாட்டிற்கு எதிராக செயற்படும் ஆயுதக்குழு ஒன்றிற்கு, ஐக்கிய நாடுகளில் உறுப்பினராகவுள்ள நாடொன்று ஆயுதங்களை வழங்குவதாகவும் அமெரிக்க செனற் வெளியுறவுக்குழு குறிப்பிட்டுள்ளது.

எத்திரியா இத்தாலிய காலணித்துவ நாடாகும், 1941ஆம் ஆண்டு பிரித்தானியாவின் ஆட்சிக்குள் இந்நாடு கொண்டுவரப்பட்டது.

1952ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தின்படி எத்திரியா சுயாட்சி கொண்ட எத்தியோப்பாவின் ஒரு பிராந்தியாமாக கொண்டுவரப்பட்டது.

நீண்டகால போராட்டத்திற்கு பின்னர் 1993ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் எத்திரியா தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.

குறிப்பிட்ட இந்த நாட்டு அரசாங்கமே விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்க செனற் சபை குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



1993 ஆம் ஆண்டு எரித்திரியா என்கின்ற தனிநாடு முழுமையான இராணுவ பலம் மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.

இன்று எங்களிடம் எங்களுடைய தாய் மண்ணின் மூன்றில் ஒரு பகுதி முழுமையான நிர்வாகப் பகுதியாக இருக்கின்றது. ஆனால் எரித்திரிய விடுதலைப் போராளிகள் தங்களுடைய நிலத்தை அதாவது முழுமையாக மீட்பதற்கான அந்தக் கடைசித் தாக்குதலை மேற்கொண்ட போது மிகச் சிறிய நிலப்பரப்புத் தான் அவர்களுடைய கைவசம் இருந்தது.

அந்த மிகச் சிறிய நிலப்பரப்பிலிருந்து தங்களுடைய நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த மக்கள் அனைவருடைய பலத்தின் மூலம் அவர்கள் தங்களுடைய தாய் மண் முழுமையையும் மீட்டனர். தங்களுடைய தாய் மண்ணை ஆக்கிரமித்திருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் எதிரிப் படைகளைச் சிறைப் பிடித்தனர்.

அவர்களுடைய பல நூற்றுக்கணக்கான டாங்கிகள் ஆட்டிலறிகள் மிகப் பெரும் போர்க் கலங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

இது 93 ஆம் ஆண்டு நடந்த வரலாறு.

எரித்திரியா 93 ஆம் ஆண்டு தங்களுடைய நிலப்பரப்பு முழுமையையும் மீட்டு தாங்கள் ஓர் தனியரசு என்று அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்.

அப்போது ஐ.நா.வில் ஒரு பிரச்சினை எழுந்தது. இதனை அங்கீகரிப்பதா இல்லையா என்று. அப்போது எரித்திய மக்கள் அனைவரிடமும் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

எரித்தியா தனிநாடாகப் போக வேண்டுமா இல்லையா என்பது. நீங்களே தீர்மானியுங்கள் என்று.

எரித்திய மக்கள் நாங்கள் தனிநாடாகத் தான் இருக்க விரும்புகின்றோம் என்று வாக்களித்தார்கள்.

எரித்தியா என்கின்ற தனிநாடு உருவானது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வானொலியான புலிகளின் குரலின் செய்தி ஆசிரியர் தி.இறைவன் அவர்கள்
முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் அவர் பேசியவை
நன்றி>யாழ்.கொம்

No comments: