Sunday, September 02, 2007

மன்னாரில் முஸ்லீம் கிராமத்தவர்களை மனிதகேடயமாக பயன்படுத்தும் சிறீலங்கா படையினர்!

முசலி பிரிவுக்குட்பட்ட மன்னார் மாவட்டத்தில் சுமார் 50 முஸ்லீம் குடும்பத்தவர்களை மனிதகேடயங்களாக பயன்படுத்தி சிறீலங்கா படையினர் முன்னேற்ற நடவடிக்கையினை சனிக்கிழமை காலை மேற்கொண்டதாக தெரியவருகிறது.

இதேவேளை முள்ளிக்குளம் பகுதியில் உள்ள கிராமத்தவர்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள நானாட்டான் பிரிவுக்குட்பட்ட அச்சங்குளம் பகுதிநோக்கி இடம்பெயர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

இப்பிரதேம் விடுதலைப்புலிகளும் சிறீலங்காபடையினரும் பிரசன்னமாகியிருக்கும் பிரதேசமாக இருந்ததாகவும் இப்பிரதேசத்தினுள் சிறீலங்கா படையினர் முன்னகர்ந்தபோது விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை எனவும் தெரியவருகிறது.

பண்டாரவெளி, முசலி, பிச்சைவாணிபக்குளம், கூழாங்குளம், பொற்குளம் ஆகியபகுதியில் 2002 ம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபின் மீளகுடியமர்த்தப்பட்ட முஸ்லீம் மக்களே இவ்வாறு மனிதகேடயங்களாக பயன்படுத்தப்பட்டுவந்ததாக இவ்இராணுவ நடவடிக்கையடுத்து தப்பிவந்த முஸ்லீம் இடம்பெயர்ந்த மக்கள் தெரிவித்தள்ளனர்.
நன்றி>பதிவு.

No comments: