Wednesday, September 26, 2007

கருணா பிரித்தானியாவுக்கு தப்பி ஓட்டம்?

கருணா கூலிக்குழுவின் தலைவர் கருணா இவர்களது குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற பிளவினையடுத்து பாதுகாப்பு தேடி பிரித்தானியாவுக்கு தப்பி ஓடியுள்ளதாக தெரியவருகிறது.

இவரது குடும்பத்தினர் கடந்த ஒருவருடத்திற்கு மேலாக பிரித்தானியாவில் தங்கியிருப்பதாகவும் கொழும்பில் இவருக்கு விசாகிடைக்கப்பெற்று நான்கு நாட்களின்பின் பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும். இவரது சிறீலங்கா கைத்தொலைபேசி இலக்கம் இன்னமும் வேலை செய்வதாகவும் இவருக்கு நெருங்கியவட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.

இதேவேளை அரசாங்கதரப்பில் இருந்தும் கருணாகுழுவிற்கு சில அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் அதாவது மற்றய துணைஇராணுவக்குழுக்களான ஈ.பி.டிபி போன்றவற்றை கிழக்கில் இயங்கவிடாமல் செயற்படுவதை தொடர்ந்தே இவ்அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாகவும் மேலும் அறியமுடிகிறது.
நன்றி>பதிவு.

No comments: