ஹபரணை திகம்பத்தனையில் சிறிலங்கா கடற்படையினரின் வாகனத் தொடரணி மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 92 சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 150 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து சுமார் 190 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பொலநறுவ -மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் ஹபரணை திகம்பத்தனையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
திருகோணமலையிலிருந்து 80 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஹபரணை-திருகோணமலை வீதி 101-102ம் மைல் கற்களுக்கு இடையில் ஏ-6 வீதியில் இத்தாக்குதல் நடந்துள்ளது.
திருகோணமலை கடற்படைத்தளத்துக்கு செல்வதற்காக ஹபரணை திகம்பத்தனை வீதியில் நிறுத்தி வைக்கப்படடடிருந்த கடற்படையினரின் வாகனத் தொடரணி மீது வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வாகனம் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
சிறிலங்கா கடற்படையின் வாகனத் தொடரணியில் 24 பேரூந்துகளில் 340 கடற்படையினர் இருந்ததாகவும் அவற்றில் சுமார் 13 பேரூந்துகள் தாக்குதலில் சிதறின என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் 90 கடற்படையினர் கொல்லப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்புப் பேச்சாளரான அமைச்சர் கேகலிய ரம்புக்வெல உறுதிப்படுத்தியுள்ளார்.
நன்றி>புதினம்.
Monday, October 16, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment